இளம்பிள்ளை, ஏப்.15- வருடத்தில் ஒரு மாதம் மட்டுமே பூக்கும் அபூர்வ சரக் கொன்றை மலர்கள் தற்போது, ஆட்டையாம்பட்டி அருகே பூத்துக் குலுங்குகின்றன. தமிழகத்தில் சித்திரை திருநாள் மிக விமர்சியாக கொண்டாடுவதுபோல், கேரளாவிலும் சித்திரை விஷூ என்ற பெயரில் சிறப்பாக மக்கள் கொண்டாடி வருகின்றனர். இவர்களின் கொண்டாடத்தில் முக்கிய பங்கு வகிக்கும் மஞ்சள் வண்ண மலரான சரக்கொண்றை மலர்கள் தற்போது சேலத்தில் சில இடங்களில் பூத்துக் குலுங்குகிறது. ஆண்டுக்கு ஒருமுறை சித்திரை மாதத்தில் மட்டுமே பூக்கும் சரக் கொண்றை மரங்கள் ஆட்டையாம்பட்டியை அடுத்துள்ள மருளையம்பாளையம் மற்றும் அரியாகவுண்டம்பட்டி, லவ் - ஓ காலனி உள்ளிட்ட சில இடங்களில் மட்டுமே உள்ளது. தற்போது அனைத்தும் மரங்களிலும் மஞ்சள் வண்ண மலர்கள் கொத்து, கொத்தாக பூத்துக் குலுங்குகின்னறன. திராட்சை பழங்கள் போன்று சரம் சரமாக பச்சை இலைகளே தெரியாதவாறு மரம் முழுவதும் பூத்துக் குலுங்கும் சரக்கொன்றை மலர்களால் அப்பகுதியே மணம் வீசி ரம்மியமான சூழல் நிலவுகிறது. குறிப்பாக, கொளுத் தும் வெய்யிலில் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் மரம் முழுவதும் மஞ்சள் வண்ணத்தில் பூத்துக்குலுங்கி பார்ப் பவர்களின் மனதை மயக்கும் வகையிலுள்ள இந்த மரத்தை பொதுமக்கள் கண் குளிர ரசித்து செல்கின்றனர்.