சேலம், பிப்.1- சேலம் வணிக வளாகத்தில் உள்ள பூ மார்க்கெட்டில் மேற்கூரை அகற்றப்பட்டதால், ஆவேசம டைந்த வியாபாரிகள் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலி யுறுத்தி மறியலில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டங்களில் பல் வேறு பகுதிகளில் இருந்து விவசா யிகள் ஏராளமானோர் தங்கள் விளைவித்த பூக்களை விற்பனை செய்வதற்காக தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள வணிக வளா கத்திலுள்ள பூ மார்க்கெட்டில் விற் பனை செய்து வருகின்றனர். கடந்த ஒரு வருட காலமாக செயல்பட்டு வரும் தற்காலிக பூ மார்க்கெட் பகு தியில், வணிக வளாகத்தில் முதல் தளத்தில் பல்வேறு வணிக நிறுவ னங்களின் கடைகளும் உள்ளன. இந்நிலையில், மேற்கூரை அமைக் கப்பட்டுள்ளதால் வணிக நிறுவனங் களின் கடைகள் பொதுமக்களுக்கு தெரிவதில்லை எனக்கூறி, வணிக வளாகத்தில் உள்ள கடை உரிமை யாளர்கள் திடீரென பூ மார்க்கெட் டின் மேற்கூரையை அகற்றி விட்ட னர். இதனால் பூ வியாபாரிகள், கடும் வெயில் தாக்கத்தில் விற் பனை செய்ய முடியாமலும், பூக் கள் வாடி விடுவதாலும் தங்கள் கொண்டு வந்த பூக்களை விற்பனை செய்ய முடியாமல் கொட்ட வேண் டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இத னால் லட்சக்கணக்கான ரூபாய் மதிப் புள்ள பூக்கள் விற்பனை செய்ய முடியமால் நட்டம் ஏற்பட்டு வருவ தாகக்கூறி, பூ மார்க்கெட் பகுதியில் உள்ள சாலையில் அமர்ந்து வியா பாரிகள் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்து வந்த சேலம் நகர காவல் துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக் கப்படும் என தெரிவித்தனர். அதன் பேரில் வியாபாரிகள் போராட் டத்தை கைவிட்டு கலைந்து சென்ற னர். இதுகுறித்து பூ வியாபாரி கள் கூறுகையில், மார்க்கெட் பகுதி யில் வஉசி பூ மார்க்கெட் அமைந் துள்ளது. இந்த கட்டிடத்தை புதுப் பித்து தற்போது ஒரு வருடத்திற்கு முன்பு பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டது. ஆனால், இதுவரை எங்களை அங்கு பூ வியாபாரம் செய்ய மாநகராட்சி நிர்வாகம் அனு மதிக்காமல் காலம் தாழ்த்தி வரு கிறது. கடந்த ஒரு வருடமாக தற் காலிகமாக அமைக்கப்பட்டுள்ள வணிக வளாகத்தில் பூ மார்க்கெட் கடைகள் அமைக்கப்பட்டு, தொழில் செய்து வருகிறோம். மேலே உள்ள கடை உரிமையாளர்கள் தங்களது கடை தெரியவில்லை எனக்கூறி, எங்களுக்காக அமைக்கப்பட்டு இருந்த மேற்கூறையை திடீரென அகற்றிவிட்டனர். இதனால் நாங் கள் கொண்டு வந்த பூக்கள் அனைத் தும் விற்பனை செய்ய முடியாமல் வாடிய நிலையில் இருப்பதால், வாடிக்கையாளர்கள் பூக்களை வாங்க மறுக்கின்றனர். இதனால் எங் களுக்கு மிகுந்த நடட்டம் ஏற்பட்டுள் ளது. கடுமையான வெயில் தாக்கம் உள்ளதால், தொழில் செய்ய முடி யாத சூழ்நிலை உள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து மேற்கூரை அமைத்துத்தர வேண்டும். இல் லையென்றால் மார்க்கெட் பகுதி யில் திறக்கப்பட்டு ஒரு வருடமாகி யும், பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் உள்ள இடத்தில் எங் களை பூ விற்பனை செய்ய அனு மதிக்க வேண்டும். இதனை ஏற்காத பட்சத்தில் அடுத்த கட்டமாக மிகப் பெரிய அளவில் மாநகராட்சி அலுவ லகத்தை முற்றுகையிட வேண்டிய சூழ்நிலை ஏற்படும், என்றனர்.