கோவை, பிப்.23- தமிழ்நாடு வேளாண் பல்க லைக்கழகத்தில் மலர் கண்காட்சி துவங்கியது. கண்கவர் மலர்க ளால் பல்வேறு வடிவமைப்புகள் செய்யப்பட்டு பார்வையாளர்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் ஆறாவது மலர் கண்காட்சி துவங் கியது. மூன்று நாட்கள் நடைபெ றும் இந்த கண்காட்சியை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதா லட்சுமி ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். சுமார் 12 ஆண்டுக ளுக்கு பிறகு நடைபெறும் இந்த மலர் கண்காட்சியில் பல்வேறு விதமான மலர்கள் மற்றும் சிறு தானியங்களை கொண்டு செய்யப் பட்ட வடிவங்கள் பார்வையாளர் களை வெகுவாக கவர்ந்துள்ளது. குறிப்பாக, இந்த மலர் கண் காட்சியில் பெரிய மலர் கூடையில் வைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர், சிறுதானியங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள சதுரங் கம், தமிழர் பண்பாட்டை பறை சாற்றும் வகையில் மலர்களால் வடிவமைக்கப்பட்ட ஜல்லிக்கட்டு பொங்கல் திருநாள், சந்திரயான், இசை கருவிகளுக்கு இடையே SPB, கேரட்டை உண்ணும் முயல், யானை பராமரிப்பாளர்கள் பொம் மன் பெள்ளி ஆகியவை பார்வை யாளர்களையும், குழந்தைகளை யும் வெகுவாக கவர்ந்தன. மேலும் இந்த கண்காட்சியில் போன்சாய் செடிகள், வெளிநாட்டு செடிகள், மூலிகை செடிகள், வீட்டில் வளர்க்கப்படும் கண்கவர் மலர்கள், டென்னிஸ் ஆடுகளம், கிரிக்கெட் வீரர்களின் செல்பி ஸ்பாட் ஆகியவையும் இடம் பெற்று இருந்தன. இந்த கண்காட் சியை பார்க்க வந்திருந்த அனைவ ரும் பல்வேறு இடங்களில் நின்று புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர். மேலும் இந்த கண் காட்சியில் மலர் செடிகள் வளர்ப்பு, மூலிகை செடிகள் வளர்ப்பு குறித் தும் பொது மக்களுக்கு எடுத்து ரைக்கப்படுகின்றன. இந்த கண்காட்சிக்கு வருபவர் கள் பெரியவர்களுக்கு ரூ.100ம், குழந்தைகளுக்கு ரூ.50ம் கட்ட ணம் நிர்ணயிக்கப்பட்டு வசூ லிக்கப்படுகிறது. மேலும், இந்த மலர் கண்காட்சியில் பல்வேறு தனி யார் நிறுவனங்கள் தற்காலிக உணவு விடுதிகளை அமைத்துள் ளன. இந்நிகழ்வில் செய்தியாளர் களை சந்தித்த வேளாண் பல்க லைக்கழகத் துணைவேந்தர் கீதா லட்சுமி, பொதுமக்கள் அனைவ ரும் இந்த கண்காட்சியை குடும்பங் களுடன் வந்து கண்டுக்களிக்க வேண்டும் எனவும், நாள்தோறும் பல்வேறு குழுவினரின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற உள்ள தாக தெரிவித்தார்.