கோவை குற்றலாத்தில் வெள்ளம்
கோவை, நவ. 9- கோவையில் புதன்கி ழமை இரவு பெய்த கன மழை காரணமாக கோவை குற்றாலம் மூடப்பட்டது. சுற்றுலா பயணிகள் ஏமாற் றம் அடைந்தனர். கோவையின் முக்கிய சுற்றுலா தளமாக கோவை குற்றாலம் விளங்கி வருகி றது. நாள்தோறும் ஆயிரக் கணக்கான சுற்றுலா பய ணிகள் இங்கு வருகை புரி கின்றனர். இந்நிலையில், கோவை மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர் பிடிப்பு பகுதியில் புதன் கிழமை இரவு கனமழை கொட்டித்தீர்த்தது. இத னால், கோவை குற்றாலத் தில் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு கோவை குற்றால அருவி செல்வதற்கு வனத்துறை யினர் தடை விதித்துள்ளனர். வெள்ளத்தின் அளவு குறைந்து நீரின் வரத்து இயல்பான நிலைக்கு வரும் வரை பொது மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள தாக தெரிவிக்கப்பட்டுள் ளது. இதனால், குற்றாலத் திற்கு வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
புளியம்பட்டியில் 10 ஆவது புத்தகத் திருவிழா
ஈரோடு, நவ. 9- புன்செய் புளியம்பட்டியில் நடைபெற்ற 10 ஆவது புத்தகத் திருவிழாவில் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள புத்தகங்கள் விற்பனையாகின. ஈரோடு மாவட்டம் புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல அறக்கட்டளை சார்பில் 10 ஆவது ஆண்டு புத்தகத் திருவிழா நடைபெற் றது. நவம்பர் 1 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை நடைபெற்ற புத்தகத் திருவிழா வில், 20க்கும் மேற்பட்ட முன்னணி பதிப்ப கங்கள், புத்தக விற்பனையாளர்கள் பங்கேற் றனர். கண்காட்சியில் இரண்டு லட்சத்திற் கும் மேற்பட்ட தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங் கள் விற்பனைக்காக வைக்கப்பட்டு அனைத்து புத்தகத்திற்கும் 10 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்பட்டது. இந்நிலையில், புத்தக கண்காட்சியின் நிறைவு விழா கடந்த செவ்வாயன்று நடை பெற்றது. விழாவை, விடியல் செயலாளர் எஸ். ஜெயகாந்தன் வரவேற்று பேசினார். முன்னாள் நகர்மன்ற தலைவர் பி.எஸ்.அன்பு தலைமை தாங்கினார். அம்மா மெட்ரிக் பள்ளி செயலர் ராணி அன்பு, பட்டிமன்ற பேச்சாளர் சித்ரா சுப்பிரமணியன், ஆகியோர் முன் னிலை வகித்தனர். தொடர்ந்து, புத்தக திரு விழாவில் சுமார் 5 லட்சம் மதிப்புள்ள புத்தகங் கள் விற்பனையாகிதாகவும், விடியல் சமூக நல அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட் டது.
ஓய்வூதியர் சங்க மாநாடு
கோவை, நவ.9- நாடு முழுவதும் 4ஜி மற்றும் 5ஜி சேவைகளை வழங்கும் உரிமைகளை பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு கொடுத் திட வேண்டும் என ஓய்வூதியர் சங்க மாநாடு வலியுறுத்தி யுள்ளது. அகில இந்திய பிஎஸ்என்எல் தொலைதொடர்புதுறை ஓய்வூதியர் சங்க பொள்ளாச்சி வட்டக்கிளை மூன்றாவது மாநாடு, ஏடிஎஸ்சி தியேட்டர் அருகில் உள்ள வங்கி ஊழியர் சங்க கட்டிடத்தில் புதனன்று நடைபெற்றது. கிளைத் தலைவர் பி.தங்கமணி தலைமை ஏற்றார். அகில இந்திய அமைப்பு செயலர் வி.வெங்கட்ராமன், மாவட்டச் செயலாளர் ஏ.குமார், மாநில உதவி பொருளாளர் பி.நிசார் அகமது உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிறுத்திவைக்கபட்ட இடிஏவை உடனடியாக வழங்கிட வேண்டும். 3 ஆவது சம்பள கமிஷன் 15 சதவீதம் கிடைத்திட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன. மாநாட்டில், பொள்ளாச்சி வட்டக்கிளை தலை வராக பி.தங்கமணி, செயலாளராக ஆர்.பிரபாகரன், பொரு ளாளராக ஜி.கருப்பசாமி உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழு தேர்ந்தெடுக்கப்பட்டது.
இடதுசாரிக் கட்சிகள் கண்டன பரப்புரை 3 ஆம் பக்கத் தொடர்ச்சி
0.11.2023 வரை (2 x 2) பிரதிநிதிகள் பங்கேற்கும் பேச்சுவார்த்தையை நடத்துகின்றனர். இந்தப் பேச்சுவார்த்தையில், இஸ்ரேல் போர் நிறுத்தத்தை அறிவிப்பதற்கு அமெரிக்காவை ஒன்றிய பாஜக அரசு நிர்ப்பந்திக்க வேண்டும். அமெரிக்க அரசு, இஸ்ரேலுக்கு வழங்கி வரும் ராணுவ ஆயுதங்கள், நிதியுதவிகளை நிறுத்த வேண்டும்; ஐக்கிய நாடுகள் அவை மிகப் பெரும்பான்மையுடன் நிறைவேற்றிய போர் நிறுத்த தீர்மானம் உடனடியாக ஏற்கப்பட வேண்டும் என வலியுறுத்த வேண்டும். ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் கவுன்சில் பாலஸ்தீ னர்களின் நீண்ட போராட்டத்துக்கு தீர்வாக முன் மொழிந்துள்ள இரு நாடுகள் கொள்கை ஏற்கப்பட்டு, 1967-க்கு முந்தைய நிலையில் மேற்கு ஜெருச லேத்தை தலைமையிடமாகக் கொண்டு சுதந்திர நாடாக பாலஸ்தீனம் ஏற்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் இந்திய அரசு வலியுறுத்த வேண்டும்.
நவ.20 சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்
எனவே, இந்த கோரிக்கைகளை முன்வைத்து, 14.11.2023 முதல் 16.11.2023 வரை தமிழ்நாடு முழு வதும் மாவட்ட, வட்டார அளவில் பரப்புரை இயக்கம் நடத்துவது என்றும், 20.11.2023 அன்று தலைநகர் சென்னையில் கட்சியின் மாநிலத் தலைவர்கள் பங்கேற்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டின் அயலுறவுக் கொள்கையைப் பாது காக்க நீடித்த சமாதானம் நிலவ வேண்டும் என்ற கொள்கையை வலியுறுத்தி நடைபெறும் பரப்புரை இயக்கம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பொது மக்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென இடதுசாரிக் கட்சி கள் அழைக்கின்றன. இவ்வாறு கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
22 கிலோ இனிப்பு, காரம் பொருட்கள் பறிமுதல்
தர்மபுரி, நவ.9- காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்த கோபால், காரிமங் லத்தில் மொரப்பூர் சாலை, நெடுஞ்சாலை, அகரம் பிரிவு சாலை, தருமபுரி சாலை, பேருந்து நிலை யம் உட்பட சுமார் 20க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு செய்தார். அதிக நிறமூட் டிகள் சேர்க்கப்பட்ட கார, இனிப்பு வகை கள் 22 கிலோ மற்றும் காலாவதி யான குளிர்பானங்கள், உரிய விபரங்கள் அச்சிடாத மூலப்பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ.1000 வீதம் 4 கடைகளுக்கு உடனடி அபராதம் விதிக்கப் பட்டது.
பெரியார் சிலை விவகாரம் : அண்ணாமலைக்கு முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பதில்
சென்னை, நவ.9- அண்ணாமலை பேசியதற்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார் சமீபத்தில் என்மண் என் மக்கள் என்ற நடைபயணத்தின் போது ஸ்ரீரங் கம் கோயில் முன் இருக்கும் பெரியார் சிலை உட்பட கோவில்களுக்கு முன் உள்ள அனைத்து பெரியார் சிலைக ளும் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் நீக்கப்படும் என்று தெரிவித் தார். இது குறித்து ஜெயக்குமார் கூறு கையில்,“பெரியார் சிலை அகற்றம் செய்யப்படும் என பேசுவது அண்ணா மலைக்கு பின்னடைவு ஏற்படும். தமிழ கம் இதை கண்டிப்பாக அவரது கருத்தை ஏற்றுக்கொள்ளாது” என் றார். ஒரு தலைவர் புகழ் போற்றப்பட வேண்டும், அதுதான் மாண்பு, மரியா தையும் கூட. தலைவர்கள் புகழை சிதைக்கும் வகையில் எந்த ஒரு கருத்து தெரிவித்தாலும் அது முகம் சுழிக்கும் கருத்தாகவே கருதப்படும் என்றார்.
புகார் கொடுத்தவர்கள் மீதே வழக்கு
ஈரோடு, நவ. 9- பள்ளியில் வன்கொடுமை நடப்பதாக அளிக்கப் பட்ட புகாரை ஏற்காத காவல்துறை, அதற்காக போரா டிய மார்க்சிஸ்ட் கட்சியினர் மற்றும் தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணியினர் மீது வழக்கு பதிவு செய்து அலைகழித்து வருகிறது. ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டம், பெரியூர் அரசு நடுநிலைப் பள்ளியில் கடந்த ஆண்டு பட்டிய லின மாணவர்களை தரையில் பெயிண்ட் அடிக்க வைத்த சம்பவம் குறித்து, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தாலுக்கா செயலாளர் ஆர்.சிவ லிங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடுமுடி-மொடக்குறிச்சி செயலாளர் கே.பி.கனக வேல் ஆகியோர் காவல் நிலையத்தில் வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய புகார் அளித்தனர். ஆனால் காவல் துறையினர் இப்புகார் மீது எந்த வொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தும், புகா ரில் உண்மையில்லை என விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் வழக்குப்பதிவு செய்யாத காவல் துறையினரைக் கண்டித்தும், பட்டியலின மாணவர் களுக்கு நடந்த கொடுமையை கண்டித்தும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணினர் இணைந்து போராட்டம் நடத்தி னர். இதனைத்தொடர்ந்து, போராட்டம் நடத்திய 22 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவ்வ ழக்கு கடந்த புதன்கிழமையன்று விசாரணைக்கு வந் தது. இந்த விசாரணையில் போராட்டக்காரர்கள் கலந்து கொண்டனர். தீண்டாமை கொடுமைக்கெதி ராக தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி போராடி வருகிறது. தலித் மக்கள் மீதான ஒடுக்குமுறையை அம்பலப்படுத்தினால், அதனை தடுக்க வக்கற்ற காவல்துறை, இயக்கம் நடத்துகிற அமைப்பினர் மீதே வழக்கு பதிவு செய்வது, முற் போக்காளர்கள் மத்தியில் அதிப்தியை ஏற்படுத்தி யுள்ளது.