கோவை, நவ.11- கோவை மாநகராட்சிக்குட்பட்ட வெள்ளகிணறு பகுதியில் கனமழை யால் பாதிக்கப்பட்ட மக்களை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். வடகிழக்கு பருவமழையின் காரண மாக, கோவையில் கடந்த இரண்டு நாட்களாக இரவில் கனமழை கொட் டித்தீர்த்தது. இதனால், கோவை யின் மாநகர் மற்றும் புறநகரில் உள்ள தாழ்வான குடியிருப்பு பகுதிக ளுக்குள் மழைநீர் தேங்கியது. குறிப் பாக கோவை கவுண்டம்பாளையம் அடுத்த வெள்ளகிணறு பகுதியில் பெய்த கனமழை காரணமாக அந்த பகுதியில் குடியிருக்கும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும், அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு வாயில் பகுதி யில், தண்ணீர் அதிகளவில் தேங்கி நிற்பதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்நிலையில், மழைநீர் புகுந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.ந டராஜன் பார்வையிட்டு ஆய்வு செய் தார். மேலும், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந் தார். மாவட்ட நிர்வாகத்தின் கவனத் திற்கு உடனடியாக கொண்டு செல் வதாக உறுதியளித்தார். இதனைத்தொடர்ந்து, மாநகராட்சி அதிகாரிகளோடு பேசி அடைக்கப் பட்ட மழைநீர் வடிகால்களை உடனடி யாக சுத்தம் செய்ய உத்தரவிட்ட அவர், மழைநீர் புகுந்து பாதிப்பு ஏற்பட்ட வெள்ளகிணறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தையும், மழைநீரால் நிறைந் துள்ள வெள்ளகிணறு குளம், வெள்ளக் கிணறு தெற்குக் குளம் ஆகியவற் றையும் பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது, சிபிஐ மாநி லப் பொருளாளர் ஆறுமுகம், திமுக மூத்த தலைவர் வெ.ந.பழனியப்பன், மதிமுக மாநகர மாவட்டச் செயலா ளர் செல்வராஜ், சிபிஐ மாவட்டச் செய லாளர் சிவசாமி, மார்க்சிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர்கள் வி.இராம மூர்த்தி, சுமதி மற்றும் மாமன்ற உறுப்பி னர்கள் புஷ்பலதா அருண் குமார், சித்ரா தங்கவேலு, மார்க்சிஸ்ட் கட்சியில் எஸ்.எஸ்.குளம் மேற்கு கமிட்டி செய லாளர் சண்முக சுந்தரம், சிபிஐ வடக்கு மண்டலச் செயலாளர் பாண்டியன், மதிமுக பகுதி கழகச் செயலாளர் வி.சம்பத் உள்ளிட்டோர் உடனிருந்த னர்.