திருப்பூர், செப். 2- திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் லேசான தூரலுடன் மழை பெய்து வந்தது. இந்நிலையில் வியா ழகிழமை இரவு 11மணி முதல் அதி காலை வரை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள் ளம் பெருக்கெடுத்து ஓடி தாழ்வான பகுதிகளில் குளம் போல் தண்ணீர் தேங்கிய நிலையில் காணப்பட்டது. மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில்:- திருப்பூர் வடக்கு-51, அவினாசி -6-.40, பல்லடம்-5, ஊத்துக் குளி-4, காங்கயம் -84, தாராபுரம்-36, மூல னூர் -10, குண்டடம்-2, திரு மூர்த்திஅணை-1, உடுமலை- 1.40, மடத்துக்குளம்-2, திருப் பூர் கலெக்டரேட்-46, வெள்ள கோவில் ஆர்.ஐ.அலுவல கம்-12.20, திருப்பூர் தெற்கு-36, திருப்பூர் கலெக்டர் முகாம் அலுவலகம்-92.30. மாவட்டம் முழுவதும் மொத்தம் 443.30 மி.மீ., மழை பெய்துள்ளது. 90அடி உயரமுள்ள அமராவதி அணையில் 87.70 அடிக்கு தண் ணீர் உள்ளது. தொடர்ந்து நீர்வ ரத்து உள்ளதால் அணையில் இருந்து ஆற்றில் 1600 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.