திருப்பூர், டிச. 27 – திருப்பூர் மாநகராட்சி 4ஆவது வார்டு ஜெ.ஜெ.நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் தேங்கிய கழி வுநீர் சாலையில் சென்றது குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வடக்கு ஒன்றிய சமத்துவபுரம் கிளை செயலாளர் தனராஜ் குறுஞ்செய்தி மூலம் மாநகராட்சி நிர்வாகத்துக்கு புகார் தெரிவித்தார். அதன் அடிப்படையில் அதிகாரிகள் விரைந்து நடவ டிக்கை எடுத்து, மாநகராட்சி கழிவுநீர் அகற்றும் லாரியை அடுக்குமாடி குடியிருப்புப் பகுதிக்கு அனுப்பி வைத்த னர். அதன் மூலம், அப்பகுதியில் தேங்கியிருந்த கழிவு நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். புகாரைத் தொடர்ந்து உடனடி நடவடிக்கை மேற்கொண்ட மாநக ராட்சி அதிகாரிகளுக்கு தனராஜ் நன்றி தெரிவித்தார்.