திருப்பூர், அக்.31- சென்னை உயர்நீதிமன்ற உத்தர வுப்படி, நகராட்சிகள் துறை நிர்வாக இயக்குநர் அறிவித்திருக்கும் குறைந் தபட்ச ஊதியத்தை, உள்ளாட்சிக ளில் ஒப்பந்ததாரர்களிடம் வேலை செய்யும் ஊழியர்களுக்கு வழங்குவ தற்கு திருப்பூரில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தமிழ்நாட்டில் உள்ளாட்சிகளில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய் யும் பணியாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம், முந்தைய அரசா ணையை விட குறைவாக நிர்ணயிக் கப்பட்டதை எதிர்த்து திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் (சிஐடியு) சென்னை உயர்நீதிமனறத்தில் உயர் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில் உயர் நீதிமன்றம், அரசாணை 2 (டி), 62ன்படி குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயித்து வழங்க நகராட்சிகள் நிர்வாக இயக்குநருக்கு உத்தரவு பிறப்பித்தது. கடந்த திங்களன்று சிஐடியு மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன், மாநிலச் செயலாளர் கள் கே.சி.கோபிகுமார், கே.ரங்க ராஜ் மற்றும் சம்மேளன பொருளாளர் பாலசுப்ரமணியம் ஆகியோர் சென் னையில் நகராட்சி நிர்வாக இயக்கு நர், சிவராசுவிடம் நேரில் சந்தித்து நீதி மன்ற உத்தரவை அமல்படுத்த வலியு றுத்தினர். நகராட்சிகள் நிர்வாக இயக் குநரும் அரசாணை 2 (டி) 62இன்படி குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயித்து வழங்க உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவு நகலையும் சிஐடியு நிர்வாகி களிடம் வழங்கினார். இதன்படி மாநகராட்சிகளில் வேலை செய்யும் தூய்மைப் பணியா ளர்கள் மற்றும் டிபிசி ஊழியர்க ளுக்கு தினக்கூலியாக ரூ.725ம், குடி நீர் பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர் களுக்கு ரூ.763ம் வழங்க வேண்டும்.
அதேபோல, நகராட்சிகளில் பணிபுரி யும் தூய்மைப் பணியாளர்கள் மற் றும் டிபிசி ஊழியர்களுக்கு தினக் கூலி ரூ.610 வீதமும், குடிநீர் பணியா ளர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு ரூ.687 வீதமும் வழங்க வேண்டும். பேரூ ராட்சிகளில் தூய்மை பணியாளர்கள் மற்றும் டிபிசி ஊழியர்களுக்கு ரூ.533 வீதமும், குடிநீர் பணியாளர் மற்றும் ஓட்டுநர்களுக்கு ரூ.610 வீதமும் தினக் கூலி வழங்க வேண்டும். இதேபோல் கிராம ஊராட்சிக ளில் தூய்மைப் பணியாளர்களுக்கு மாத ஊதியம் ரூ.11ஆயிரத்து 848, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக் குநர்களுக்கு (ஓ.எச்.டி ஆப்ரேட்டர்) ரூ. 13ஆயிரத்து 848 என்றபடி வழங்க வேண்டும் என நகராட்சி நிர்வாக ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படியும், நக ராட்சி நிர்வாக இயக்குநரின் சுற்ற றிக்கையின் படியும் திருப்பூர் மாவட் டத்தில் உள்ள திருப்பூர் மாநகராட்சி மற்றும் நகராட்சிகள், பேரூராட்சிக ளில் இந்த குறைந்தபட்ச ஊதியத்தை நடைமுறைப்படுத்த, தொழிலாளர் துறை உதவி ஆணையர் முன்னிலை யில் செவ்வாயன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த் தையில் மாநகராட்சி, நகராட்சிக ளின் சுகாதார அலுவலர்கள், சிஐடியு ஊராட்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் கே.ரங்க ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், உள்ளாட்சி நிர்வாகங்கள் நீதி மன்ற உத்தரவுப்படியான குறைந்த பட்ச ஊதியத்தை அமல்படுத்த தொழிலாளர் துறை உதவி ஆணை யர் அறிவுறுத்தியுள்ளார்.