ஈரோடு, ஜூலை 18- கிராமப்புற நூறு நாள் வேலை உறுதித்திட்டத்தில் நடைபெறும் குள றுபடிகளை கலைந்திட வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கடம்பூர் மலை கமிட்டி 2 ஆவது மாநாடு எஸ்.பழனியம்மாள் தலைமையில் நடைபெற்றது. சங்கத் தின் கொடியை சடையம்மாள் ஏற்றி வைத்தார். மாநாட்டை துவக்கி வைத்து மாவட்ட தலைவர் பா.லலிதா உரையாற்றினார். இதில், கடம்பூர் பேருந்து நிலையத்தில் உள்ள மதுக் கடையை உடனடியாக அகற்ற வேண் டும். நூறு நாள் வேலை திட்டத்தில் நிலவும் குளறுபடிகளை கலைந்து, வாரம் ஒருமுறை பணித்தலங்க ளுக்கே சென்று சம்பளம் வழங்க வேண் டும். அணில் நத்தம் பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும். குன்றி பகுதியில் மருத்து வமனை மற்றும் போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும். திக் கரை மற்றும் கிணத்துதொட்டி பகுதி களில் சாலை வசதி அமைக்க வேண் டும் உள்ளி்ட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இதனைத்தொடர்ந்து மாதர் சங் கத்தின் கடம்பூர் மலை கமிட்டி தலை வராக பழனியம்மாள், செயலாளராக தாயாலம்மாள், பொருளாளராக வினோதினி உட்பட 9 பேர் கொண்ட கமிட்டி தேர்வு செய்யப்பட்டது. மாவட்ட துணை தலைவர் ஆர்.கோமதி நிறைவுரையாற்றினார். முடி வில் ஆர்.பாக்கியலட்சுமி நன்றி கூறி னார்.