பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் முதலாம் மண்டல தண்ணீர் திறப்பு சம்பந்தமான கோரிக்கைக்காக சனியன்று கோவை மண்டல தலைமைப் பொறியாளர் முத்துசாமியை பிஏபி நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களின் நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர். முதலாம் மண்டலப் பாசனத்திற்கு நீர் திறந்து விடுவது, கடுமையான வெயில் காலம் வருவதால் கூடுதலாக தண்ணீர் வழங்க வேண்டும். அதற்கு முன் கிளை மற்றும் பகிர்மானக் கால்வாய்களை முழுமையாகத் தூர்வார வேண்டும். இது சம்பந்தமாக விரைந்து அரசுக்கு பரிந்துரை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை மனு கொடுத்து வலியுறுத்தப்பட்டது.