மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்
நாமக்கல், நவ.16- நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில், முதலாமாண்டு மாணவர்களுக்கு செவ்வாயன்று வகுப்புகள் துவங்கி உள்ளது. நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில், இளநிலை மருத்துவ (எம்பிபிஎஸ்) மாணவா் சேர்க்கைக்கு 100 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2021ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இக்கல்லூரியில் அகில இந்திய ஒதுக்கீடு அடிப்படையில் 15 இடங்களும், பொதுப் பிரிவில் 85 இடங்களும் உள்ளன. தொடக்க ஆண்டில் 100 பணியிடங்களும் முழுமையாக நிரம்பி விட்டன. அகில இந்திய ஒதுக்கீட்டில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் அதிகம் சேர்க்கை பெற்றனர். 2022-ஆம் ஆண்டு நீட் தோ்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளில், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் இதுவரை 84 பேர் சேர்க்கை பெற்றுள்ளனர். இவர்களில் ஒருவர் அகில இந்திய ஒதுக் கீட்டின் அடிப்படையில் ராஜஸ்தானில் இருந்து வந்து சேர்ந் துள்ளார். 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 6 பேர் உள்பட பொதுப் பிரிவில் 83 மாணவ, மாணவிகள் சேர்க்கை பெற்றுள்ளனர். நவ.15 முதல் மருத்துவக் கல்லூரிகளில் வகுப்புகளை தொடங்க அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை பெற்று வகுப்புக்கு வந்திருந்த 84 மாணவ, மாணவி களுக்கு கல்லூரியின் செயல்பாடுகள், வகுப்பறைகள், ஆய்வுக் கூடங்கள், விடுதிகள் ஆகியவை குறித்து துணை முதல்வர் எஸ்.வெங்கடசுப்பிரமணியம் தலைமையில் பேரா சிரியர்கள் குழுவினர் விளக்கம் அளித்தனர்.
கோவை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாசகர் மன்றம் துவக்கம்
கோவை, நவ.16- கோவை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் வாசகர் மன்றம் துவங்கப்பட்டுள்ளது. கோவை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் வாசகர் மன்ற துவக்க விழா கல்லூரி முதல்வர் பி.தேன்மொழி தலை மையில் நடைபெற்றது. ஆங்கிலத்துறை விரிவுரையாளர் ஏ.பிரேமா வரவேற்புரையாற்றினார். கல்லூரி வாசகர் மன்ற ஒருங்கிணைப்பாளர் என்.பாலகிருஷ்ணன், வாசகர் மன்றம் குறித்து உரையாற்றினார். துணை முதல்வர் எம்.வரதகுரு, துறைத்தலைவர்கள் எம்.பி.சரவணன், சண்முக சிவகாம வள்ளி, சுதா ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். எஸ்என்எம்வி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இயற்பியல் துறைத் தலைவரும், நூலக வாசகர் வட்டத் தலைவருமான க.லெனின் பாரதி வாசகர் மன்றத்தை துவக்கி வைத்து, “வாசிப்பின் அவசியம்’’ எனும் தலைப்பில் உரையாற்றினார். மேலும், பல்வேறு அறிஞர்களின் புத்தகங்களை அறி முகப்படுத்தி வைத்தா. இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வாசகர் மன்ற மாணவர் பொறுப்பாளர் ஜே. ஜெரோம் ஹில்சன் நன்றி கூறினார்.
நேரு பிறந்த நாள் பேச்சு போட்டி முடிவுகள் அறிவிப்பு
ஈரோடு, நவ.16- தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஜவஹர்லால்நேரு அவர்களின் பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான பேச்சுப் போட்டி ஈரோடு கலை மகள் கல்வி நிலையத்திலும், கல்லூரி மாணவ, மாணவி யர்களுக்கான பேச்சுப் போட்டி ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியிலும் நடத்தப்பட்டது. பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான பேச்சுப் போட்டி யில் 23 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். இதில் கவுந்தப்பாடி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி வெ. பிரணிதா முதல்பரிசு ரூ.5000, கலைமகள் பெண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவி ச.லயா இரண்டாம் பரிசு ரூ.3000, நல்லாம்பட்டி, அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி செ. லோகபாலா மூன்றாம் பரிசு ரூ.2000 பெற்றனர். ரூ.2000க்கான சிறப்புப் பரிசினை வீரப்பன் சத்திரம், மாசிமலை ரங்க சாமிக் கவுண்டர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி த.சுதா மற்றும் குருவரெட்டியூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ப.தீனுகாவும் ஆகியோர் பெற்றனர். கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான பேச்சுப் போட்டியில் 8 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண் டனர்.
வாலிபர் தற்கொலை
சேலம், நவ.16- சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகிலுள்ள மந்திவளவு பகுதியை சேர்ந் தவர் பழனிசாமி மகன் கதிர் வேல் (22). இவர் ஐடிஐ படித்து விட்டு வீட்டில் நெசவு தொழில் செய்து வந்தார். இவருக்கு அடிக்கடி வயிற்று வலியால், மனவேதனை யடைந்த வீட்டிலிருந்த பூச்சி கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த் தனர். அங்கு சிகிச்சை பல னின்றி பரிதாபமாக உயிரி ழந்தார்.
கேட்பாரற்று கிடந்த பச்சிளம் பெண் சிசு
ஈரோடு, நவ.16- மொடக்குறிச்சி அருகே தென்னந்தோப்பில் பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் சிசுவை போலீசார் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே எழுமாத்தூர், பட்டாசுப்பாளி அண்ணா நகரைச் சோ்ந்தவர் விவசாயி மோகன். இவரது தோட்டத்தில் ரஞ்சித் என்பவர் விவசாய வேலை செய்வதற்காக செவ்வாயன்று சென்றுள்ளார். அப்போது தோட்டத்தில் உள்ள மோட்டார் அறையில் குழந்தை அழும் சப்தம் கேட்டு உள்ளே சென்று பார்த்தபோது, பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் மொடக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து குழந்தையை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும், எழுமாத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மாரிமுத்து மற்றும் மருத்துவக் குழுவினா் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனா். அப்போது அங்கு நள்ளிரவில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த அடையாளங்களுடன் ரத்தக்கறை படிந்து இருந்தது தெரியவந்தது. பேருந்து வசதி இல்லாத கிராமத்துக்கு வந்து குழந்தையைப் பெற்றது யார், பெண்ணுக்கு பிரசவம் பார்த்தது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிணற்றில் தவறி விழுந்த குழந்தை காப்பாற்ற முயன்ற தாயும் பலி
சேலம், நவ.16- சேலம் அருகே கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்ற முயன்ற தாயும் உரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், அம்மாபேட்டை அருகே உள்ள மாசி நாயக்கன்பட்டி, இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத். இவருக்கு திருமணமாகி மீனா என்ற மனைவியும், சுபஸ்ரீ என்ற 11 மாத குழந்தையும் உள்ளது. இந்நிலையில், செவ்வா யன்று மீனா, சுபஸ்ரீக்கு உணவு ஊட்டி கொண்டிருந்தார். குழந்தைக்கு வேடிக்கை காண்பிப்பதற்காக கிணற்றின் அருகே உணவை ஊட்டி கொண்டிருந்தார். அப்பொழுது, அந்த தரைமட்ட கிணற்றில் குழந்தை சுபஸ்ரீ தவறி விழுந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மீனா, குழந்தையை காப்பற்று வதற்காக கிணற்றில் குதித்தார். ஆனால், சிறிது நேரத்தில் சுபஸ்ரீயும், மீனாவும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்மா பேட்டை காவல் துறையினர், உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், திருமணமாகி நான்கு வருடம் மட்டுமே ஆன நிலையில், இவர்களின் இறப்பு குறித்து வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடைபெற்று வரு கிறது. குழந்தைக்கு உணவு ஊட்டும் பொழுது கிணற்றில் தவறி விழுந்து தாயும், குழந்தையும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நடக்க இருப்பவை
புஞ்சை புளியம்பட்டி புத்தக திருவிழா-2022 கருத்தரங்கம் நாள்: வியாழக்கிழமை நேரம்: மாலை 5 மணி இடம்: கே.ஜி.மஹால், டானாபுதூர், புஞ்சை புளியம்பட்டி தலைப்பு: மானிட சமுத்திரம் நானென்று கூவு கருத்தாளர்: மதுக்கூர் ராமலிங்கம், மாநிலத் தலைவர், தமுஎகச பெரிதினும் பெரிது கேள் கருத்தாளர் கே.சுப்பராயன், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர். ஏற்பாடு: பெரியார் அண்ணா சிந்தனையாளர் பேரவை, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.
சத்துணவு ஊழியர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு
திருப்பூர், நவ.16- திருப்பூர் மாவட்ட சத்துணவு ஊழியர்கள் கோரிக்கை களை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப் பட்டுள்ளது. தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் சத்து ணவு ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத்-திடம் மனு அளிக்கப் பட்டது. அம்மனுவில், சமையல் உதவியாளர்களுக்கு சமைய லராக பதவி உயர்வும், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற சமைய லர் மற்றும் சமையல் உதவியாளர்களுக்கு அமைப்பாளராக பதவி உயர்வும், பணியிடமாறுதல் வேண்டி விண்ணப்பித்த வர்கள் அனைவருக்கும் பணியிடமாறுதல் வழங்கவும், காலிப் பணியிடங்களை நிரப்பிடவும், திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத் தில் சத்துணவு சம்பந்தமாக ஏற்படும் குறைபாடுகளுக்கு நடவ டிக்கைகள் எடுக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியு றுத்தியுள்ளனர். இதில் சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச்செய லாளர் அ.மலர்விழி, முன்னாள் மாநிலத் தலைவர் கி.பழனிச் சாமி, மாவட்ட தலைவர் விஜயலட்சுமி, மாவட்ட செயலாளர் ச.முருகேசன், மாவட்ட பொருளாளர் ராஜேஸ்வரி, மாநில செயற்குழு உறுப்பினர் பாக்கியம் மற்றும் ஒன்றிய நிர்வாகி கள் மாசிலாமணி, ஆறுமுகம், ஜெயந்தி, தெய்வானை, புஸ்ப வள்ளி, செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.
விவசாய வேலை செய்த பெண்ணை காட்டுப்பன்றி தாக்கியது
உடுமலை, நவ.16- குடிமங்கலம் ஒன்றியம், விருகல்பட்டியில் விவசாய வேலை செய்து கொண்டிருந்த பெண் தொழிலாளி மீது காட் டுப்பன்றி தாக்கியது. இதில் காயமடைந்த பெண் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம் குடிமங்க லம் ஒன்றியத்தில், விருகல்பட்டி பழையூரில் ச.தங்கமுத்து (புல எண் 181) என்பவர் பருத்தி விவசாயம் செய்து வருகி றார். இவரது தோட்டத்தில் புதனன்று காலையில் வேலை ஆட்கள் உரம் வைக்க சென்றிருந்தனர். இந்நிலையில் பெண் தொழிலாளியான தி.பாப்பாத்தி (45) என்பவரை அந்த பருத்தி தோட்டத்திற்குள் மறைந்திருந்த காட்டுப்பன்றி ஒன்று திடீ ரென தாக்கியது. இதில் பாப்பாத்திக்கு காலில் காயம் ஏற்பட் டுள்ளது. இதையடுத்து பாப்பாத்தி பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். முட்புதர்களை அகற்றுக காட்டுப்பன்றிகளால் ஏற்படும் சேதம் குறித்து அக்டோ பர் மாதம் நடந்த விவசாயிகள் குறை தீர்க் கூட்டத்திலும் விரி வாகப் பேசப்பட்டு ஊடகங்களிலும் செய்தி வந்துள்ளது. இது வரை விவசாய பயிர்களுக்கு சேதம் விளைவித்த பன்றிகள் தற் போது விவசாயிகளையும் தாக்கத் தொடங்கியுள்ளது. இத னால் விருகல்பட்டி, அணிக்கடவு, புதுப்பாளையம், அடி வள்ளி போன்ற கிராமங்களில் இரவு விவசாயிகள் தோட்டங் களுக்குச் செல்ல அச்சமடைந்துள்ளனர். இந்த பன்றிகள் கரு வேல மரங்கள் அடர்ந்த பகுதிகளுக்குள் சென்று தங்கிக் கொள்கின்றன. இப்பகுதிகளில் இயங்கும் காற்றாலைகள் அருகில் இருக்கும் முட்புதர்களில்தான் காட்டுப்பன்றிகள் தஞ் சம் அடைகின்றன. எனவே காற்றாலை பகுதிகளில் முட்புதர்கள், கருவேல மரங்களை அகற்றிட காற்றாலை நிறுவனங்களுக்கு உத்தர விட வேண்டும். காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் விவசா யக் கூலி பெண் தொழிலாளிக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் குடிமங்கலம் ஒன்றி யச் செயலாளர் சி.ஜெ.ஸ்ரீதர் திருப்பூர் மாவட்ட ஆட்சிய ருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
திருப்பூர் மாநகரில் 2023 இறுதிக்குள் சாலை பணிகள் முழுமையடையும்: மேயர்
திருப்பூர், நவ.16- திருப்பூர் மாநகரில் 2023ஆம் ஆண்டு இறுதிக்குள் அனைத்து சாலைப் பணிகளும் முழுமையாக சீரமைக்கப் பட்டு விடும் என்று மாநகராட்சி ஆணையர் ந.தினேஷ்குமார் கூறினார். திருப்பூர் மாநகராட்சி மாமன்றக் கூட்டம் புதனன்று மேயர் ந.தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத் தில் பேசிய மாமன்ற உறுப்பினர்கள் குடிநீர், சாலை, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது, சாலை பணிகள் குறித்து மேயர் ந.தினேஷ்குமார் பதில் கூறினார். அம்ரூத் திட்ட இரண்டாம் கட்டப் பணிகளுக்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு ஒப்புதல் கிடைத் துள்ளது. அதிகபட்சம் 30 நாட்களில் பணிகள் தொடங்க டெண்டர் விடப்படும். அதேபோல் அம்ரூத் மூன்றாம் கட்ட பணி களுக்கு ரூ.20 கோடி வர இருக்கிறது. இதில் பிரதான சாலைகளில் பேட்ஜ் ஒர்க் (ஒட்டுப் போடு தல்) பணிகள் மாமன்ற உறுப்பினர்கள் கொடுத்த பட்டியல் அடிப்படையில் வேலை செய்யப்படும். ஏற்கெனவே 34 கிலோ மீட்டர் நீளத்துக்கு சாலை பணி நடைபெற்றுள்ளது. இன்னும் 75 கிலோமீட்டர் நீளத்துக்கு சாலை பணிக்கு நிதியாதாரம் தயா ராக உள்ளது. விடுபட்ட சாலைகளைத் தெரிவித்தால் அப் பணிகள் நிறைவேற்றப்படும். தமிழக முதல்வர் சாலை பணிகளுக்கு கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் ரூ.2000 கோடி ஒதுக்கி அறிவிப்பு செய்தார். இதில் திருப்பூருக்கு மேலும் ரூ.40 கோடி ஒதுக்க வாய்ப்பு உள் ளது. மாநகரில் மொத்தமுள்ள 699 கிலோமீட்டர் சாலை யில் 359 கிலோமீட்டர் சாலைகள் சீரமைக்கப்பட்டு விட்டன. எஞ்சிய சாலைகள் நிதியாதாரத்தைப் பெற்று நிச்சயம் புனர மைக்கப்படும். 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்த சாலைப் பணிகள் முழுமையாக செய்து முடிக்கப்படும் என்றார். குடிநீர் பிரச்சனை மாமன்ற உறுப்பினர்கள் குடிநீர் பிரச்சனை குறித்து பேசு கையில், அடிக்கடி குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் விரயம் ஆவதுடன், மக்களுக்கு குடிநீர் வழங்குவதும் பாதிக்கப்படு கிறது. 15 முதல் 20 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோ கம் செய்யும் நிலை உள்ளது என்று கூறினர். இதற்கு பதில் அளித்த மேயர் தினேஷ்குமார், “மேட்டுப் பாளையம் குடிநீரேற்று நிலையத்தில் அடிக்கடி நீரேற்றம் நிறுத்தப்படுகிறது. மின் தடை, பம்பிங் பிரச்சனை ஆகிய வற்றை தொடர்ந்து தினமும் கண்காணித்து வருகிறோம். மேட் டுப்பாளையத்தில் இருந்து வெளியே கொண்டு வருவதற்கு பெரும் சிரமப்பட வேண்டியுள்ளது. இன்னும் 40 மீட்டர் தூரம் தான் குழாய் பணி நிலுவையாக உள்ளது. அவை விரைவில் நிறைவேற்றப்படும். இரண்டாவது திட்டத்தில் இருந்து தின மும் 24 மில்லியன் லிட்டர் குடிநீர் முழுமையாக பெறுவது சவா லானதாக உள்ளது. ஒரு முறை பழுது பட்டு நீரேற்றம் நின்று விட்டால் அதை சரி செய்து மீண்டும் இயக்க ஆறு முதல் 8 மணி நேரம் ஆகிறது. எனினும் குழாய் பணி முடியும் தருவா யில் உள்ளது. இனிமேல் பாதிப்பில்லாமல் குடிநீர் வழங்க முடியும்” என்றார்.
சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் பற்றாக்குறை
ற்றாக்குறை திருப்பூர், நவ.16- திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 17 நகர் நல நிலையங்க ளில் மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளது. நோயாளிக ளுக்கு உரிய மருந்து, மாத்திரை தருவதிலும் பிரச்சனை உள் ளது என்று மன்ற கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் கூறி னர். இதற்கு பதில் அளித்த மாநகராட்சி நல அலுவலர் கௌரி சரவணன் கூறியதாவது: திருப்பூர் மாநகரில் மொத்தம் 17 நகர் நல மையங்கள், 2 மாணவர்களுக்கான பரிசோதனை மையங் கள், ஒரு நடமாடும் மருத்துவ அலகு ஆகியவை உள்ளன. மொத்தம் டாக்டர்கள் பணியிடங்கள் எண்ணிக்கை 20. இதில் 6 இடங்கள் காலியாக உள்ளன. மீதமுள்ள 14 மருத்துவர்களில் 3 மருத்துவர்கள் மகப்பேறு விடுமுறையிலும், இருவர் மருத் துவ விடுமுறையிலும் உள்ளனர். மீதமுள்ள 9 மருத்துவர் களைக் கொண்டு, தலா இரண்டு நகர்நல மையங்களுக்கு ஒரு மருத்துவர் என்ற அடிப்படையில் சமாளித்து வருகிறோம். இதில் தாய் சேய் நலம், மகப்பேறு மருத்துவத்துக்கு முன்னு ரிமை கொடுக்கப்பட்டு வருகிறது. திங்கள், வியாழக்கிழமை களில் மருந்துகள் வழங்கப்படும். இங்குள்ள நிலை குறித்து பொது சுகாதாரத் துறை இயக்கு நருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவர் தேர் வாணையம் மூலம் டிசம்பர் இறுதிக்குள் தேர்வு வைத்து மருத்துவர்கள் நிரப்பப்படுவர். அத்துடன் இரண்டு நாட்கள் மருத்துவர் கலந்தாய்வு நடைபெறுகிறது. இதில் மருத்து வர்கள் திருப்பூருக்கு வந்தாலும், அவர்களையும் பயன் படுத்திக் கொள்வோம், என்று தெரிவித்தார்.
ஆடுகளை திருடிய 4 பேர் கைது
திருப்பூர், நவ.16- குண்டடம் அருகே உள்ள ஜோதியம்பட்டி வாத்திய காட்டுத்தோட்டம் பகுதி யைச் சேர்ந்த ந.முத்துச்சாமி (77), ஆடுகளை வளர்த்து வருகிறார். அதில் 3 செம் மறி ஆடுகள், ஒரு வெள் ளாட்டு கிடாயையும் காண வில்லை என போலீசில் புகாரளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசா ரனை மேற்கொண்டு வந்த நிலையில், ஆடுகளை திருடியதாக ஆலங்காட்டு தோட்டம் க.நவீன்குமார் (32), திருச்சியைச் சேர்ந்த மு.ஆனந்தன் (44), கேரளா மாநிலம், எர்னாகுளத்தைச் சேர்ந்த ஃப்.பயாஜ் (49), ஜோதியம்பட்டி, தாசங் காட்டு தோட்டம் பகுதியைச் சேர்ந்த து.பூபதிராஜா (34) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
நவ. 20 அன்று செல்போன்களை அணைத்து குழந்தைகளுடன் ஒரு நேரம் செலவழிப்போம்
சென்னை, நவ.16- குடும்ப உறவுகளை மேம்படுத்த நவ.20 ஆம் தேதி குழந்தைகளுடன் ஒரு நேரம் செல வழிப்போம் என பெற்றோர் வட்டம் அறை கூவல் விடுத்துள்ளது. இதுகுறித்து சென்னையில் செய்தியா ளர்களிடம் பேசிய பெற்றோர்கள் வட்டத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் நளினா ராமலக்ஷ்மி கூறுகையில், நேர்மறையான உற வுகள் மற்றும் நெருங்கியவர்களுடன் இருப்ப தன் மூலம் குழந்தைகள் பாதுகாப்பாகவும் அன்பாகவும் உணர்கிறார்கள். உறவுகளை உருவாக்குவதற்கு மொபைல் போன்கள், தொலைக்காட்சி போன்றவற்றின் குறுக்கீடு கள் இல்லாமல், நம் குழந்தைகளுடன் தர மான நேரத்தைச் செலவிடுவதும் அவர்களு டன் விளையாட்டில் ஈடுபடுவதும், அர்த்த முள்ள தகவல்களை பரிமாற்றம் செய்வதும் தான் அவசியம். ஆரோக்கியமான டிஜிட்டல் நடைமுறைகள் மற்றும் கேட்ஜட் இல்லாத இணைப்பு நேரம் ஒவ்வொரு குடும்பத்தின் வழக்கமான பகுதியாக மாறவேண்டும். நவம்பர் 20 ஆம் தேதி (உலக குழந்தைகள் தினம்) இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை இப்படிப்பட்ட சமூக முன் முயற்சியில் பங் கேற்பதன் மூலம் அனைவரும் தங்கள் குடும் பங்களுடன் மீண்டும் இணையுமாறு பெற் றோர்கள் வட்டம் கேட்டுக்கொள்கிறது. இந்த ஒரு மணி நேரத்தில், குடும்பங்கள் தங்கள் கேட் ஜட்களை டிஸ்கனெக்ட் செய்து, விளை யாடுவது, பேசுவது, சாப்பிடுவது மற்றும் ஒன் றாகச் சிரிப்பது, மகிழ்ச்சியை வேடிக்கை யான வழியில் மீண்டும் கண்டுபிடிப்பது என தங்கள் குழந்தைகளுடன் நேரத்தைச் செல விட வேண்டும் என்று விரும்புகிறது. உங்கள் குழந்தைகளுடன் நம்பகமான உறவை வளர்ப்பதே வெற்றிகரமான குழந்தை வளர்ப்புக்கு முக்கியமானது. இது நடக்க, பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் நேரத் தைச் செலவிட வேண்டும். அவர்கள் சொல்வ தைக் கேட்பது, அவர்களுடன் அரட்டை அடிப் பது அல்லது விளையாடுவது மற்றும் வேடிக்கை பார்ப்பது, இனிமையான நினைவு களை உருவாக்குவது என இந்த சிறப்புத் தரு ணங்களில் செல்போன் உட்பட பிற கவனச் சிதறல்கள் இல்லாமல் குழந்தைகளுடன் இணைவதில் கவனம் செலுத்த வேண்டும். வருடத்திற்கு ஒரு முறை மட்டுமில்லாமல், இதை ஒரு வழக்கமான நடைமுறையில் கொண்டுவர ஊக்குவிப்போம் என்றார். தி ராம்கோ சிமெண்ட்ஸ் லிமிடெட் தலைமை செயல் அதிகாரி ஏ.வி.தர்மகிருஷ் ணன் கூறுகையில், மொபைல்கள், ஐபேட் கள், ஐபாட்கள், விளையாட்டு மென்பொருட் கள் போன்றவற்றின் பரவலான பயன்பாட் டின் காரணமாக குழந்தைகளின் கவனம், படிப்பு மற்றும் கூடுதல் பாடத்திட்ட செயல் பாடுகளிலிருந்து திசை திரும்பியுள்ளது. பிள் ளைகள், பெற்றோரின் அறிவுரைகளைச் சில நேரங்களில் சரிவர கடைப்பிடிக்காமல் போகும் போது குடும்பச் சூழல் மோசமாகப் பாதிக்கப் படுகிறது. இதன் விளைவாக, குடும்ப உறவு கள் உடைந்து போகின்றன. குறிப்பாக பெற் றோர் இருவரும் வேலைக்குச் செல்லும் குடும் பங்களில் பெற்றோரும், குழந்தைகளும் டிவி போன்றவற்றை ஒதுக்கிவைத்துவிட்டு தின சரி ஒரு மணி நேரமாவது ஒன்றாக நேரம் செலவிடவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது, என்றார்.
அரசுக்கல்லூரியில் மரங்கள் வெட்டி விற்பனை
நாமக்கல், நவ.16- அரசின் முன் அனுமதி பெறாமல் அரசு கல்லூரியில் 22 மரங்களை வெட்டி விற்பனை செய்தது தொடர்பான புகா ரில், நாமக்கல் மாவட்ட உதவி வனப் பாதுகாப்பு அலுவலர் உள்ளிட்ட வனத் துறையினர் செவ்வாயன்று விசாரணை மேற்கொண்டு மரங்களின் மதிப்பீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் திரு வள்ளுவர் அரசு கலை அறிவியல் கல் லூரியில் கடந்த மாதம் 22 மரங்களை வெட்டி, கல்லூரி பொறுப்பு முதல்வர் சு.பங்காரு விற்பனை செய்தது சர்ச் சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக நாமக்கல் கோட்டாட்சியர் மஞ்சுளா உள் ளிட்ட வருவாய் ஆய்வாளர், கிராம நிர் வாக அலுவலர் ஏற்கெனவே விசா ரணை மேற்கொண்டனர். விசாரணை யில், கல்லூரி வளாகத்தில் உள்ள பழ மையான 22 மரங்கள் அரசின் முறை யான முன் அனுமதி பெறாமல் வெட்டப் பட்டதும், பல டன் மரங்கள் லாரியில் ஏற் றிக்கொண்டு போய் ரூ.9120க்கு விற் பனை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து வரு வாய்த்துறையினர் ஆட்சியருக்கு அறிக்கை அனுப்பினர். இந்நிலையில், வெட்டப்பட்ட மரங் கள் குறித்து வனத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டதுடன், வெட்டிய மரங்களை அளவீடு செய்து, மதிப்பு அறிக்கை சமர்ப் பிக்க உத்தரவிடப்பட்டது. இதன்படி செவ்வாயன்று நாமக்கல் உதவி வன பாதுகாப்பு அலுவலர் வெ.அல்லிராஜ், வனத்துறையினர் பறக்கும் படை வன சரகர் சக்திகணேசன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து, கல்லூரி பொறுப்பு முதல் வர் பங்காருவிடம் விசாரணை மேற் கொண்டனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரி கள் கூறுகையில், வெட்டப்பட்ட 22 மரங் களையும் நேரில் பார்வையிட்டு அள வீடு செய்யப்பட்டுள்ளது. இதன் அறிக்கை மாவட்ட ஆட்சியருக்கு சமர்ப் பிக்கப்படும். பின்னர் இதுகுறித்த நடவ டிக்கையை மாவட்ட ஆட்சியர், பசுமைக் குழு முடிவு செய்யும், என்றனர்.
செல்போன் கடைகளில் திருட்டு
கோவை, நவ.16- கோவை மாவட்டம், போத்தனூரை சேர்ந்தவர் புண்ணிய கோடி. இவர் சாரதா மில் சாலையில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர் செவ்வாயன்று காலை கடையை திறக்க வந்த போது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, கடையி லிருந்த சுமார் ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான செல்போன்கள் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சி களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இதே போன்று போத்தனூர் சாரதா மில் சாலையில் ஒரே நாளில் அடுத் தடுத்து மேலும் 2 செல்போன் கடைகளில் திருடு போனதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து போத் தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். ஒரே நாளில் 3 செல்போன் கடைகளில் திருடு போன சம்பவம் அந்த பகுதியில் கடை நடத்தி வரும் உரிமையாளர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவில் நிலம் மீட்பு
சேலம், நவ.16- சேலம் மாவட்டம், நர சிம்மன் செட்டி சாலையில், சித்திரைச்சாவடி ஸ்ரீ சுப்பிர மணிய சுவாமி கோவில் உள் ளது. இந்த கோவிலுக்கு சொந் தமான ரூ.60 லட்சம் மதிப் புள்ள, ஆயிரத்து 418 சதுரடி நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து இருந்தனர். இது குறித்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், அந்த நிலத்தை ஆக்கிரமிப்பாளர் களிடம் இருந்து மீட்டு, கோவில் நிர்வாகம் எடுத்துக் கொள்ள நீதிமன்றம் உத்தர விட்டது. இதையடுத்து சேலம் மண்டல இந்து சமய அறநிலைய துறை இணை ஆணையர் மங்கையர்க்கரசி மேற்பார்வையில், ஆக்கிர மிப்பாளர்களிடம் நிலம் மீட் கப்பட்டது.