districts

img

கோவையில் முதன்முறையாக பேருந்தை இயக்கும் பெண் ஓட்டுநர்

கோவை காந்திபுரம், சோமனூர் வழியில் பேருந்தை இயக்கும் ஷர்மிளா. பேருந்தை  ஓட்டும் ஷர்மிளா ஆணுக்குப் பெண் எந்தவிதத்திலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்து உள்ளார்.  பேருந்தை கடந்து வருவோரும், போவோரும் ஒரு நிமிடம் நின்று ஷர்மிளாவுக்கு வாழ்த்து சொல்லிவிட்டுத் தான் நகர்கின்றனர். காந்திபுரம் பேருந்து நிலையத்தில் ஷர்மிளாவுடன் செல்பி எடுக்கவும் கூட்டம் அலைமோதுகிறது.

ஆட்டோ ஓட்டுநரான அவர் தந்தை மகேஷ் தான் அவருக்கு ஊக்கம் அளித்தார் என கூறும் அவர். அவர் தந்தை ஓட்டும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஆட்டோவை ஓட்டிப் பார்த்த ஷர்மிளா, தந்தைக்கு துணையாகவும் ஆட்டோ ஒட்டி இருக்கிறார்.
பின்னர் பேருந்து ஓட்டுநராக வேண்டும் என கனவாக கொண்ட ஷர்மிளா, கனரக வாகனங்கள் ஓட்டுவதற்கான முறையான பயிற்சி பெற்று உரிமமும் பெற்று உள்ளார். ஆண்கள் மட்டுமே அதிகம் இருக்கும் கனரக வாகன ஓட்டுநர் பணியில் தனக்கான முத்திரையைப் பதிக்க வேண்டும் என்கிறார், ஷர்மிளா. 
டிரைவர் என்றாலே சமூகத்தில் பலரும் முகச் சுழிப்புடன் தான் பார்ப்பார்கள், ஆனால்  எந்த வேலையை எல்லோரும் குறைவாக பார்த்தார்களோ அதன் மீது தான் ஆர்வம் அதிகரித்தது" என்றார். 7 ம் வகுப்பு படிக்கும் போது எனக்கு வாகனம்  ஓட்ட மீது ஆர்வம் வந்து விட்டது. வீட்டிலும், உனக்கு எதில் விருப்பமோ அதை செய் எனக் கூறி உள்ளனர். 
இப்போ தான் பேருந்தை கையில் எடுத்து உள்ளதாகவும்  ஆனால் 2019 முதலே கோவையில் ஆட்டோ ஓட்டி வந்து உள்ளதாகவும் தான் கனரக வாகன உரிமம் பெறுவதற்கும் என் அப்பா தான் முழு காரணம் எனக் கூறும் ஷர்மிளா, "நீ சாதிக்கனும்னு முடிவு பண்ணிட்டனா சாதிச்சிரு; கோயம்புத்தூர்ல என் பொண்ணு தான் முதல் பெண் பஸ் டிரைவர்னு நான் பெருமையா சொல்லிக்குவேன்" என கூறினார்  இருக்கின்றார்.
பேருந்து பயிற்சிக்கு செல்ல ஆரம்பித்த போது நகைப்புடன் ஏளனமாக பார்த்தவர்கள் எல்லாம் இன்று வியப்பாக பார்க்கிறார்கள். ஓட்டுநர் பயிற்சி முடித்ததும் அரசு வேலைக்காக காத்திருக்காமல், வி.வி டிரான்ஸ்போர்ட் என்ற தனியார் நிறுவனம் அளித்த வாய்ப்பை பயன்படுத்தி களத்தில் இறங்கி விட்டார் அவர்.
ஷர்மிளா இயக்கும் பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவி ஒருவர் கூறுகையில், :-
"வழக்கமாக ஆண்கள் மட்டுமே பேருந்து இயக்குவது பார்த்து உள்ளேன். தற்போது முதல் முதலின் இளம் பெண் ஓட்டுவது ஆச்சரியம் அளிக்கிறது" என்றார். அதே வேளையில் மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டாக சர்மிளா திகழ்கிறார்.
ஷர்மிளா இயக்கும் பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவி ஒருவர் கூறுகையில், "வழக்கமாக ஆண்கள் மட்டுமே பேருந்து இயக்குவது பார்த்துள்ளேன் தற்போது முதல் முதலின் இளம் பெண் ஓட்டுவது ஆச்சரியம் அளிக்கிறது" என்றார். அதே வேளையில் மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டாக சர்மிளா திகழ்கிறார். மேலும் ஆண் ஓட்டுனர்களிடம் பேச தயக்கம் இருக்கும்; பெண் ஓட்டுனரிடம் எளிதில் அணுகி தங்களுடைய நிறுத்தத்தில் இறங்கிக் கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.