தருமபுரி, செப்.5- தருமபுரியில் செப்.8 முதல் 17 ஆம் தேதியன்று வரை புத்தகத் திருவிழா நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தெரிவித்துள்ளார். தருமபுரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் தருமபுரி மாவட்ட நிர்வாகம், தகடூர் புத்தகப் பேரவை மற்றும் பாரதி புத்த காலயம் இணைந்து புத்தகத் திருவிழாவை நடத்தி வரு கின்றன. இந்நிலையில், இந்தாண்டு தருமபுரி புத்தகத் திருவிழா செப்.8 முதல் 17 ஆம் தேதியன்று வரை தருமபுரி, வள்ளலார் திடலில் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தருமபுரி அரசு மேல்நிலைப் பள்ளியில் “தருமபுரி வாசிக்கிறது” என்ற புத்தக வாசிப்பு நிகழ்வை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தொடங்கி வைத்தார். இதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தருமபுரி வாசிக்கிறது” என்ற நிகழ்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், ஆசிரியர் தினமான (செவ்வாயன்று) இன்று தருமபுரி மாவட்டத்தில் உள்ள 29 கல்லூரிகளிலும், 1607 பள்ளிகளிலும் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வில், சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். தருமபுரி புத்தகத் திருவிழா வள்ளலார் திடலில் செப்.8 ஆம் தேதி முதல் துவங்குகிறது. இத்திருவிழாவில் 100க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் இடம்பெறுகிறது. தருமபுரி மாவட்ட பொதுமக்கள் இந்த புத்தகத் திரு விழாவிற்கு சிறந்த ஒத்துழைப்பை வழங்குமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன், என்றார். முனனதாக இந்நிகழ்வில், பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் குமார், கல்லூரி கல்வி இயக்க மண்டல இணை இயக்குநர் இராமலட்சுமி, தருமபுரி வருவாய் கோட்டாட் சியர் டி.கே.கீதாராணி, தருமபுரி தகடூர் புத்தகப் பேரவை செயலாளர் மரு.இரா.செந்தில், தலைவர் இரா.சிசுபாலன், ஒருங்கிணைப்பாளர்கள், பொறுப்பாளர்கள், தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.