சேலம், நவ.7- சேலத்திலுள்ள பேப்பர் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில், ரூ.2 கோடி மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகின. சேலம் மாநகரம், சோழம்பள்ளம் பகுதியில் சிவகணேஷ் என்பவர், சரோஜ்குமார் என்பவருக்கு சொந்தமான குடோ னில் பேப்பர் குடோன் நடத்தி வருகிறார். இந்நிலையில், செவ்வாயன்று அதிகாலையில் திடீரென குடோனில் தீ பிடித்தது. இதுகுறித்து உடனடியாக தீயணைப்புத் துறையி னருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இவ்விபத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான பொருட் கள் தீக்கிரையாகின. இதுகுறித்து சூரமங்கலம் உதவி காவல் ஆணையர் தலைமையில் தீ பரவியதற்கான காரணங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.