திருப்பூர், ஜூலை 10- திருப்பூர் மாவட்டத்தில் நியாய விலை கடைகளில் பொருட்கள் வாங்கும் பொழுது கை ரேகை பதிவு குளறுபடிகளை சரி செய்ய சனியன்று பல்வேறு மையங்களில் சிறப்பு முகாம் நடைபெறுவதாக பத்திரிக்கை செய்தி வெளியிடப்பட்டது. அவிநாசி வட்டம், அவிநாசி சுற்றுவட்டா ரப் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் அவி நாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் இந்த முகாம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டி ருந்தது. இதை நம்பி அவிநாசி சுற்றுவட்டார பகுதி மக்கள் ஏராளமானோர் காலை 8 மணி முதல் முகாமிற்கு வந்து காத்திருந்தனர். அதில், 40-க்கும் மேற்பட்டோர் வயது முதிர்ந்த பெரியவர்களும் வந்திருந்து காத் திருந்தனர். ஆனால், ஆதார் சேவை பணி யாளர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு காலை 11:30 மணிக்கே வந்தார். வந்தவரும் இணையதளம் சரியாக வேலை செய்ய வில்லை என்று காரணமும் கூறியுள்ளார். முகாமிற்கு வந்த பயனாளர்களுக்கு போதிய தகவல்கள் வழங்கக் கூட ஆளில்லாத சூழ் நிலை ஏற்பட்டதால் பயனாளர்கள் குழப்பம டைந்தனர். மேலும், திருப்பூர் மாவட்ட நிர் வாகம் இது போன்ற நாடக முகாம்களை நடத்தி, பொதுமக்களை அலைய விட வேண் டாம் என்று அனைத்து பொதுமக்கள் மற்றும் பயனாளர்கள் மனக்குமுறலை கூறிச் சென்ற னர்.