districts

img

சம்பள பேச்சுவார்த்தையை இறுதி செய்க

சேலம், ஆக.17- முழுமை பெறாத ஒப் பந்தம், பாதகமான சரத்துக் கள் மற்றும் சம்பள பேச்சு வார்த்தையை இறுதி செய்யாத  சேலம் உருக்காலை நிர்வாகத்தை கண்டித்து சிஐடியு  உருக்காலை தொழிற்சங்கத்தினர் சேலம் உருக்காலை  முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய உருக்கு ஆணையகத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பள பேச்சுவார்த்தையை இன்று வரை இறுதி படுத்தாத செயில் நிர்வாகத்தை கண்டித்து  பொதுச்செயலாளர் கே.பி.சுரேஷ்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குறைவான எம்ஜிபி-ஐ ஈடுகட்ட இரண்டு கூடுதல் ஊதிய  உயர்வு அனைவருக்கும் வழங்க வேண்டும். 39 மாத நிலுவைத்  தொகையினை உடனடியாக வழங்க வேண்டும். சொசைட்டி  மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக இறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தப்பட்டது.  இதில், சிஐடியு மாவட்ட நிர்வாகி பி.பன்னீர்செல்வம் உள் ளிட்ட திரளான தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர்.