districts

img

அரசு விடுதிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிடுக

தருமபுரி, டிச. 25- அரசு விடுதிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப  வேண்டும் என விடுதி பணியாளர் சங்கத்தின் மாவட்ட பேரவை வலியுறுத்தியுள்ளது. தருமபுரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை விடுதி பணியாளர் சங்கத்தின் மாவட்ட பேரவை கூட்டம் சங்கத்தின் தலை வர் தேவன் தலைமையில் நடைபெற்றது.பிரச்சார செய லாளர் ஜெயக்குமார் வரவேற்றார். இதில், விடுதி காப்பாளர் சங்க மாவட்டச் செயலாளர் மூர்த்தி,  மாவட்ட இணைச்செயலாளர் தினமணி, மாவட்டப் பொரு ளாளர் வேலு, விடுதி பணியாளர் சங்க மாவட்டத் தலைவர் தேவன் மாவட்டச் செயலாளர் சங்கர் பொருளாளர் மணி கண்டன் ஆகியோர் உரையாற்றினர்.  இதில் அரசு விடுதிகளில்  உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் உள்ள 50க்கும்  மேற்பட்ட அரசு விடுதிகளில் உள்ள விடுதிகாப்பாளர், சமையலர், இரவுகாவலர் உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். இரவு காவலர்களுக்கு சமையலராக பதவி உயர்வு வழங்கி காலமுறை ஊதியம் வழங்கவேண்டும். விடுதிகளில் சமையலறைக்கு தேவையான உபகர ணங்கள், மாணவர்களுக்கு எழுத படிக்க மேசை, நாற்காலி  உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட வேண்டும். ஊழி யர்களின் முடக்கப்பட்ட அகவிலைப்படி சரண்டர் போன்ற வற்றை வழங்கப்படவேண்டும். பழைய பென்சன் திட்டத்தை  அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன. முடிவில், சங்கத்தின் நிர்வாகி அன்பழகன் நன்றி  கூறினார்.