தருமபுரி, ஜன.8- மக்கள் சேவையை மேம்ப டுத்த மின்வாரியத்தில் காலிப்பணி யிடங்களை நிரப்ப வேண்டுமென தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மண்டலக் குழு கூட்டம் தருமபுரி சிஐடியு அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் பி.ஜீவா தலை மையில் நடைபெற்றது. இதில், தமிழ் நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு பொதுச்செயலாளர் ராஜேந்திரன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். மண்டலச் செயலாளர் சிவராஜ், தரு மபுரி மாவட்டச் செயலாளர் தீ.லெ னின் மகேந்திரன், திருவண்ணா மலை மாவட்டச் செயலாளர் பாலாஜி, கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட திட்ட கோட்ட மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதில், மக்கள் சேவையை மேம்ப டுத்த மின் மின்வாரியத்தில் உள்ள 56,000 காலி பணியிடங்களை நிரப் பவேண்டும். இ-டெண்டர் முறையை அமல்படுத்தி மின் வாரியம் தனியார் மயப்டுத்துவதை கைவிட வேண்டும். மின்சார சட்டம் 2022ஐ ரத்து செய்ய வேண்டும். ஊதிய உயர்வு பேச்சுவார்த்தைக்கான குழுவை உடனடியாக அமைக் கவேண்டும். சரண்டர், டிஏ நிலுவைத் தொகை உள்ளிட்ட பணப் பயன் களை உடனடியாக வழங்கவேண் டும். தருமபுரி மின் திட்டத்தில் பெண் ஊழியர்களுக்கு தங்களது கோரிக் கைகளை முறையிட விசாக கமிட்டி அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.