districts

img

காவிரி உபரிநீரை ஏரியில் நிரப்புக

தருமபுரி, ஆக.8- ஒகேனக்கல் உபரிநீர் திட்டத்தை நிறைவேற்ற வலி யுறுத்தி  மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் பிரச்சார  இயக்கம் தருமபுரி செங் கொடி புரத்தில் நடை பெற்றது. காவிரி ஆற்றின்  உபரி நீரை தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு  நிரப்ப வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கட்சியின் சார்பில் ஆக. 16ஆம் தேதி ஒகேனக்கல்லில் துவங்கி ஆக. 18ஆம் தேதி யன்று தருமபுரியில் நடைபயணம் நிறை வடைகிறது. இதுகுறித்த பிரச்சார இயக்கம் செங் கொடி புரத்தில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.கிரைஸாமேரி தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் கே. பூபதி, நிர்வாகிகள் எஸ்.நிர்மலாராணி, தமிழ் மணி, கே.சுசிலா, உமாசங்கரி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதோபோல், பாப்பிரெட்டிபட்டியில் வட்டச் செயலாளர் தி.வ.தனுசன் தலைமை யில், மாவட்டச் செயலாளர் ஏ.குமார், எஸ். தீர்த்தகிரி, செல்வம், குறளரசன் ஆகியோர் பங்கேற்று பேசினர்.