districts

வீட்டுமனை கட்டி தருவதாக மோசடி: ரியல் எஸ்டேட் உரிமையாளர் மீது வழக்கு பதிவு

திருப்பூர், மே 1- பல்லடம் அருகே மனைப்பிரிவில் வீடு கட்டி தருவதாக மோசடியில் ஈடுபட்ட தனி யார் ரியல் எஸ்டேட் நிறுவனர் மீது பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத் தில் புகார் அளித்தனர். திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் வசித்து வருபவர் ஷீலா. பல்லடம் ஆலூத்தூ பாளையத்தில் உள்ள சன் பிரமோட்டர்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் பிரிக்கப் பட்ட மனைப்பிரிவுகளில் தவணை முறை யில் வீடு கட்டி தருவதாக விளம்பரம் செய்த னர். இதை பார்த்து தர்மராஜ் என்பவரை தொடர்பு கொண்டு அங்கு ஒரு மனைப் பிரிவு வாங்கியுள்ளார். 20 லட்சத்தில் 2  படுக்கை அறைகளுடன் வீடு கட்டி தருவ தாக கூறிய தர்மராஜ் வங்கி மூலம் கடன் வசதி செய்து தருவதாகவும் கூறியுள்ளார். இதனை அடுத்து தர்மராஜ் முன்பணம் கேட்ட நிலையில் ஷீலாதேவி 2 லட்சம் ரூபாய் முன் பணம் வழங்கியுள்ளார்.

அதனை தொடர்ந்து அவரது உறவினர் இளங்கோ என்பவரிடம் ஷீலா இது குறித்து தெரிவித்த நிலையில் அவரும் மனைப்பிரிவு வாங்குவதற்காக தர்மராஜி டம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 3 லட் சம் ரூபாய் முன் பணம் வழங்கியுள்ளார். பணத்தை பெற்று கொண்ட தர்மராஜ் ஷீலா தேவி, இளங்கோ இருவரையும் பத்திரம் பதிவு செய்ய பல்லடம் பத்திர பதிவு அலு வலகத்திற்கு வரக்கூறியுள்ளார். இந்த நிலையில் தர்மராஜ் அன்று வரா மல் இருவரையும் ஏமாற்றியதாக தெரிகி றது. இதனை அடுத்து ஷீலா தேவி, இளங்கோ கேட்டபொழுது அவராகவே ஒரு பத்திரம் தயார் செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது. பத்திரம் கொடுத்த பின்பு வங்கி கடன் வசதிக்கோ, வீட்டு வேலை களையோ தர்மராஜ் ஆரம்பிக்கவில்லை என தெரிகிறது.  இதுகுறித்து இருவரும் தர்மராஜிடம் கேட்டபொழுது அவரிடம்  இருந்து முறையான பதில் கிடைக்க வில்லை. இதனால் சந்தேகமடைந்த இருவ ரும் தர்மராஜிடம் பணத்தை திரும்ப கேட் டுள்ளனர். கடந்த 6 மாதமாக பணத்தை  தருவதாக தர்மராஜ் இழுத்தடித்து வந்த தாக கூறப்படுகிறது.  பின்னர், தர்மராஜ் மீது ஷீலாதேவி, இளங்கோ இருவரும் பல்லடம் காவல் நிலையத்தில் பணத்தை பெற்று கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக புகார் அளித்துள்ள னர். அதே சமயம்  இருவர் மீதும் தர்மராஜ் பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் பல்லடம் போலீசார் வழக்குபதிவு செய்து இரு தரப்பிலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.