districts

img

கந்துவட்டி கொடுமையால் சுகாதார பெண் ஊழியர் தற்கொலை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி போராட்டம்

அவிநாசி, மே 24- அவிநாசி அருகே ராயம்பா ளையத்தில் கந்து வட்டி கொடுமை யால் பேரூராட்சிஒப்பந்த சுகாதார பெண் ஊழியர் தூக்கிட்டு தற் கொலை செய்து கொண்ட சம்ப வத்தில் தொடர்புடைய குற்றவா ளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.    திருப்பூர் மாவட்டம், அவிநா சியை அடுத்த ராயம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன் (35). இவரது மனைவி பரிமளா (30), அவிநாசி பேரூராட்சியில் ஒப் பந்த சுகாதார ஊழியராக பணி யாற்றி வந்தார். இவர்களுக்கு சுதேசி என்ற மகனும், தேவதர் ஷினி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், சந்திரன் அதேபகு தியை சேர்ந்த தனசேகர் என்பவரி டம் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ரூ.27 ஆயிரம் கந்துவட்டிக்கு வாங்கியுள்ளார். வாராந்தோறும் கந்துவட்டி அடிப்படையில் பணம் செலுத்தி 10 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். இருப்பினும் தனசேகரன், மீதி  ரூ.17 ஆயிரத்தை உடனடியாக தர  வேண்டும் எனக்கூறி தகாத வார்த்தைகளால் பேசி கடந்த சில நாள்களாக தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படு கிறது. இதன் உச்சக்கட்டமாக திங்களன்று தனசேகர், அவரது தாயார் பூவாத்தாள்  ஆகியோர், சந்திரன் வீட்டிற்கு சென்று அங்கு குழந்தைகளுடன் இருந்த பரிமளாவை சாதிப் பெயரை கூறியும், தகாத வார்த்தை களால்திட்டியும் கொலை மிரட் டல் விடுத்துள்ளனர்.

இதனால் மனவேதனைய டைந்த பரிமளா வீட்டுக்குள் சென் றுதூக்கிட்டு தற்கொலை செய்து  கொண்டார். இதன்பின், வீட்டிற்கு  வந்த, சந்திரன் பரிமளா தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்த தைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து உடனடியாக பரிம ளாவைமீட்டு அவிநாசி அரசு மருத் துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றபோது, பரிமளா ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து அவிநாசி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர். இதற்கிடையே பரிமளாவின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள், தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி, ஆதித் தமிழர் பேரவை உள்ளிட்ட பல் வேறுஅமைப்பினர், பரிமாளா வின் உயிரிழப்பிற்கு நீதிகேட்டும், தனசேகரன், அவரது தாயார் பூவாத்தாள் ஆகியோரை வன் கொடுமைத் தடுப்புச் சட்டத்திலும், கந்துவட்டித் தடைச்சட்டத்திலும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். முதல் தக வல் அறிக்கையில் முறையாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும். உயிரிழந்த பரிமளாவின் குடும்பத் திற்கு உரிய இழப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும். பேரூராட்சி சுகாதார முன்களப் பணியாளரான  பரிமளாவின் குடும்பத்தில் ஒருவ ருக்கு அரசு வேலை வழங்க வேண் டும் என வலியுறுத்தி, பரிமளாவின்  உடலை வாங்க மறுத்து அரசு மருத் துவமனையில் காத்திருந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, வருவாய் கோட்டாட்சியர் பண்டரிநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் போராட்டக்காரர்களுடன் பேச்சு வார்த்தை மேற்கொண்டனர். இதில், தனசேகர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்து  விட்டோம். அவரது தாயாரையும் விரைவில் கைது செய்து விடுவோம். தங்கள் கோரிக்கை யான இழப்பீடு தொகையும், நாளை கொடுத்து விடுவோம். வேலை குறித்ததான முடிவு அரசு தான் முடிவு செய்யும்  என அதிகாரிகள் தரப்பில் தெரி விக்கப்பட்டது. இருப்பினும் பூவாத்தாளை கைது செய்த பிறகே உடலை வாங்குவோம்  என்றுக்கூறி போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இப்போராட்டத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் ச.நந்த கோபால், துணைச்செயலாளர் கனகராஜ், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட்கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் வெங்கடாசலம், பழ னிச்சாமி, சிஐடியு மாவட்டக் குழுஉறுப்பினர் ராஜன், ஒன்றிய  நிர்வாகி முருகேஷ், ஆதித்தமிழர் பேரவையின் விடுதலை செல் வன், மணி உட்பட பலர் பங்கேற்ற னர்.