districts

img

சுகுமார் நகர் மக்கள் பட்டா பிரச்சனை: நில உரிமை மாற்றம் செய்ய கள ஆய்வு

திருப்பூர், ஜன. 18 – திருப்பூர் பூலவாரி சுகுமாரன் நக ரில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து  வரும் புறம்போக்கு நிலப்பகுதியை நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்திற்கு நில உரிமை மாற்றம் செய்வதற்கு புதன்கிழமை கள ஆய்வுப் பணிகள் நடைபெற்றது. அப்போது திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க. செல்வராஜ் உடனிருந்தார். திருப்பூர் மாநகராட்சி, 45 ஆவது  வார்டு பூலவாரி சுகுமாரன் நகரில் 12. 78 ஏக்கர் பரப்பளவு கொண்ட நொய் யல் ஆற்று புறம்போக்கு நிலம் அமைந்துள்ளது. இப்பகுதியில் சுமார் 500 குடும்பங்கள் 40 ஆண்டு காலமாக பட்டா இன்றி வசித்து வரு கின்றனர். இப்பகுதியை குடிசை  மாற்று வாரியத்திற்கு அப்போதைய  கோவை மாவட்ட ஆட்சியரால் முன் நுழைவு அனுமதி வழங்கப்பட்டது, எனினும் அவ்வப்போது இப்ப குதி மக்களை வெளியேற்றுவதற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. மார்க் சிஸ்ட் கட்சி மற்றும் அப்போதைய சட் டமன்ற உறுப்பினர் கே.தங்கவேல் ஆகியோர் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று அந்த  மக்களை வெளியேற்றும் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது. இத்திட்டப் பகுதியில் வசித்து வரும் 479 குடும் பங்களிடம் மாத தவணை அபிவி ருத்தி தொகை வசூல் செய்யப்பட் டுள்ளது. இத்திட்ட பகுதி கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி யன்று திருப்பூர் கோட்டத்திற்கு மாறு தல் செய்யப்பட்டது.

இப்புலத்தினை  நில உரிமை மாற்றம் மேற்கொள்ள மாவட்ட ஆட்சியரால் முன்மொழிவு கள் அனுப்பப்பட்டது. இதில் எந்த  முன்னேற்றமும் இல்லாத நிலையில்,  கடந்த அக்.14 ஆம் தேதியன்று  தமிழ்நாடு முதலமைச்சர், நீர்வளத் துறை அமைச்சர், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுத்துறை அமைச்சர், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட  வருவாய் அலுவலருக்கு எம்எல்ஏ  செல்வராஜ் கடிதத்தின் வாயிலாக  வலியுறுத்தியதாக தெரிவித்துள் ளார். அதனடிப்படையில் வாரியத்தின் பெயரில் நில உரிமை மாற்றம் செய் வது தொடர்பாக தலைமை செயலா ளர் முன்னிலையில் 7 ஆவது செய லாக்க குழு கூட்டம் கடந்த நவ.25 ஆம் தேதியன்று நடைபெற்றது. இக் கூட்டத்தின் முடிவின்படி இந்த நிலத் தினை மாவட்ட வருவாய் அலுவலர், பொதுப்பணித் துறையின் நிர்வாக  பொறியாளர் மற்றும் நகர்ப்புற மேம் பாட்டு வாரிய நிர்வாக பொறியாளர் ஆகியோர் கூட்டு புலத்தணிக்கை செய்து அரசிற்கு அறிக்கை அளிக்கு மாறு கேட்டுக்கொண்டனர். அதன் அடிப்படையில் புதன்கி ழமை சுகுமாரன் நகர் பகுதியில்  களஆய்வு பணிகள் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர்  ஜெய்பீம், பொதுப்பணித் துறை  நிர்வாக பொறியாளர், வாரிய நிர்வா கப் பொறியாளர், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் மற்றும் திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் கோவிந்தராஜ் உள்பட அப்பகுதி மக் கள் கலந்து கொண்டனர்.