districts

img

தருமபுரி புத்தகத் திருவிழா இன்று துவக்கம்

தருமபுரி, செப்.8- தருமபுரி புத்தகத் திருவிழாவினை அமைச் சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சனியன்று (இன்று) துவங்கி வைக்கிறார். தமிழ்நாடு முதல்வர், மாவட்டந்தோறும் புத்தகத் திருவிழாக்கள் நடத்திட ஆணை யிட்டுள்ளதை தொடர்ந்து, தருமபுரி மாவட் டத்தில் மாவட்ட நிர்வாகம், தகடூர் புத்தகப் பேரவை மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் 5 ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா சனியன்று (இன்று) துவங்க உள்ளது. வள்ள லார் திடலில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் இத்திருவிழாவை தொடங்கி வைக் கிறார். இத்திருவிழாவில் 100க்கும் மேற் பட்ட அரங்குகளில் ஆயிரக்கணக்கான தலைப் புகளைக் கொண்ட லட்சக்கணக்கான புத்த கங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. நாள் தோறும் காலை முதல் இரவு வரை புத்தகக் கடைகள் திறந்திருக்கும். மாலை 7 மணியி லிருந்து 8.30 மணி வரை தமிழகத்தின் முன் னணி பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், பல் துறை ஆளுமைகள், அறிவுசார் சான்றோர் கள் ஆகியோரின் சொற்பொழிவு நிகழ்வுகள் மற்றும் கருத்தரங்குகள் நடைபெற உள்ளன. இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர், நாடாளு மன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்,  உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள்,  அறிவுசார் பெருமக்கள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.