மேட்டுப்பாளையம், ஜூன் 11- கல்லூரி மாணவிகள், சிஐடியு பொதுத்தொழிலாளர் சங்கத்தினர் இணைந்து மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் தூய்மைப்பணி யில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், மேட்டுப் பாளையம் அரசு மருத்துவமனை யில் குமரன் கலை அறிவியல் கல் லூரி மற்றும் சிஐடியு பொதுத்தொழி லாளர் சங்கத்தினர் இணைந்து இரண்டு நாள் அரசு மருத்துவமனை வளாகம் முழுவதும் உள்ள குப்பைகளையும், செடி, கொடிகளையும் அப்புறப் படுத்தி தூய்மைப்பணி செய்தனர். இந்நிகழ்ச்சியை மேட்டுப்பாளையம் நகர்மன்ற தலைவர் மெஹரிபா பர் வீன் அஷ்ரப் அலி துவக்கி வைத்தார். மருத்துவர்கள் சதீஷ்குமார் மனோ கரன், சிஐடியு பொதுதொழிலாளர் சங்க நிர்வாகிகள் ஷானவாஸ், சாமு வேல், ஜின்னா, செந்தில் முன்னிலை வகித்தனர். முன்னதாக, தூய்மைப் பணிக்கு வந்திருந்த மாணவ, மாண விகளிடையே, ஆரோக்கிய ஜிம் அப் துல் ரஹீம் என்பவர், பொது இடங் களில் தூய்மைப்பணி செய்வது குறித்து விழிப்புணர்வு உரையாற்றி னார். இரண்டு நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற தூய்மைப்பணியின் நிறைவாக, உழைப்பு தானம் செய்த கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மேட்டுப் பாளையம் நகர்மன்ற தலைவர் மெஹரிபா பர்வீன் அஷ்ரப் அலி, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவ மனை தலைமை மருத்துவர் கார்த் திக் மகாராஜா, மருத்துவர் விஜய், குமரன் கல்லூரி முதல்வர் சுகுணா ஆகியோர் வழங்கினர். இதன்பின் தூய்மைப்பணியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள், “பொது இடங்களில் குப்பைகளை போட மாட்டோம். பொது இடங்கள் தூய்மையாக இருக்க இதுபோன்ற பொது இடங்களில் அடிக்கடி தூய் மைப்பணியில் பங்கெடுப்போம்” என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரி யர்கள், சிஐடியு பொதுத்தொழிலா ளர் சங்க நிர்வாகிகள் சித்திக், குண சேகரன், சன்பீர் அன்சாரி, நிஜாமு தீன், ஹபிபுல்லா யாசர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இரண்டு நாட்கள் அரசு மருத்துவம னையில் தூய்மைப்பணியில் ஈடு பட்ட கல்லூரி மாணவ, மாணவிக ளுக்கு பல்வேறு சமூக நல அமைப்பு கள் பாராட்டுகளை தெரிவித்துள்ள னர்.