உதகை, பிப்.5- உதகை அருகே போலீசாரின் கொடூர தாக்குதலில் படுகாயம டைந்து உயிருக்கு ஆபத்தான நிலை யில் தனது கணவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தனது வாழ்வாதா ரம் பாதுகாக்க மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப் பட்ட பெண், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். நீலகிரி மாவட்டம், உதகை மேல் தலையாட்டிமந்து பகுதியை சேர்ந்த வர் சுரேஷ் (40). இவருக்கு திருமண மாகி ஜெயசுதா என்ற மனைவியும், இரு பெண் குழந்தைகள் உள்ள னர். சுரேஷ் கூலி வேலை செய்து வந் தார். இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதியன்று காந்தல் ரூரல் போலீசார் மோட்டார் திருடு போனது சம்பந்தமாக சுரேசை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு விசாரணை என்ற பெயரில் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் அவரது இடது கால் முறிந்து எழுந்து நடமாட முடியாத அளவிற்கு சேதம டைந்துள்ளது. இதனை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே தனது கணவரை காவல்துறையினர் கொடூரமாக தாக்கியது தொடர்பாக ஜெயசுதா, மாவட்ட காவல் கண்காணிப் பாளரை சந்தித்து புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் விசாரணை நடத் தப்பட்டு சார்பு ஆய்வாளர்கள் மனோஜ், ஜானகிராமன் மற்றும் காவலர்கள் ராஜவேலு, சுரேஷ், ஸ்டாலின் ஆகியோரை கடந்த சில நாட்களுக்கு முன்பு காவல் கண்கா ணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்நிலையில், சுரேஷின் மனைவி ஜெயசுதா, மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் மனு ஒன்றினை அளித்தார். இதில் கூறியிருப்பதா வது, நான் மாற்று திறனாளி என் கின்ற நிலையில், எனது கணவர் வேலைக்கு சென்று எங்களுக்கு தேவையானவற்றை செய்து வந் தார். இச்சூழலில் காவல்துறையி னர் தாக்கியதில் எனது கணவர் உயி ருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் வேளையில், குழந்தைகளையும் காப்பாற்ற வேண்டிய கடுமையான சூழலில் இருந்து வருகிறேன். நான் மாற்றுத் திறனாளி என்பதால் வெளியில் வேலைக்கு சென்று சம்பாதிக்க முடி யாத நிலையுள்ளது. இதனால் எங்க ளது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அன்றாட செலவுகளை கூட சமாளிக்க முடி யாத நிலை உள்ளது. எனவே அன் றாட உணவு தேவை மற்றும் அடிப் படை தேவைகளுக்கும் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உரிய உதவி கள் வழங்கிட வேண்டும், இவ்வாறு அந்த மனுவில் அவர் தெரிவித்துள் ளார்.