கோபிசெட்டிபாளையம், அக்.30- கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கம்பனூர் மலைகிராமத்தில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு வாகன வசதி இல்லாததால் அவதியடைகின்ற னர். வனவிலங்குகள் அச்சத்தால் பாதி யிலேயே திரும்பி செல்கின்ற அவலம் நிகழ்கிறது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையம் அடுத்த டி.என்.பாளையம் வனபகுதியில் விளாங்கோம்பை, கம் பனூர் மலைகிராமங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த விளாங்கோம்பை, கம்பனூர் பகுதியில் யானை, சிறுத்தை, மான், கரடி, செந்நாய் போன்ற வன விலங்குகள் அதிக நடமாட்டம் உள்ள வனபகுதியாக உள்ளது. இதனால், விளாங்கோம்பை, கம்பனூர் மலை கிரா மத்திலிருந்து 50க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் பள்ளிக்கு செல்ல வேண்டு மெனில், சுமார் 7கிலோ மீட்டர் அடந்த வனத்தின் வழியாக வினோபாநகர், கொங்கர்பாளையம் செல்ல வேண்டிய சூழல் உள்ளது. இந்நிலையில், விளாங் கோம்பை, கம்பனூர் மலைகிராமத்தில் உள்ள பள்ளி குழந்தைகள் பள்ளிக்கு செல்ல பேருந்து வசதி இல்லாததால் மாவட்ட நிர்வாகம், பள்ளி இணைந்து பள்ளி குழந்தைகளுக்காக வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டு வினோபா நகர், கொங்கர்பாளையம் தொடக்கப் பள்ளி, உயர்நிலை பள்ளிக்கு சென்று வந்தனர். இந்நிலையில், திங்களன்று விளாங் கோம்பை பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற வாகனம் கம்பனூர் மலை கிரா மத்திற்கு வரவில்லை. இதனால், மலை கிராமத்தில் பள்ளிக்கு செல்ல தயாராக இருந்த 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் அடர்ந்த வனபகுதி வழியாக செல்ல முயன் றனர். அப்போது வனவிலங்குகளின் அச் சத்தால் பள்ளிக்கு செல்லாமல் மீண்டும் குடியிருப்பு பகுதிக்கே பள்ளி குழந்தை கள் திரும்பி சென்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், வாகன வசதி இல்லாததால், பள்ளி குழந்தை கள் தங்களின் பள்ளி படிப்பு பாதிக்கப் படுகிறது. கம்பனூர் செல்லும் சாலை கரடு முரடாக உள்ளதால், பள்ளி குழந் தைகளை ஏற்றி செல்லும் வாகனம் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு மாவட்ட நிர்வாகம் கம்பனூர் மலைவாழ் மக்களின் குழந்தைகள் படிப்பின் நலன் கருதி மலை கிராமத் திற்கு வாகன வசதி ஏற்படுத்தி தர வேண் டும், என்றனர்.