திருப்பூர், அக். 17 – தமிழகத்தில் உள்ள நகராட்சிகள், மாநகராட்சிகளில் பணிபுரியும் ஊழியர் களை அரசு ஊழியர்களாக அறிவித்து அவர்களுக்கு கருவூலம் மூலம் ஊதி யம் வழங்க நடவடிக்கை எடுக்க வலியு றுத்தி திருப்பூர் மண்டல அளவில் உண் ணாவிரதம் நடைபெற்றது. திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரில் செவ்வாயன்று நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத் துக்கு மாநகராட்சி நகராட்சி அலுவலர் மற்றும் பணியாளர்கள் ஒருங்கிணைப் புக்குழுத் தலைவர் வி.எம்.வெங்கிடு சாமி தலைமை வகித்தார். மாநிலச் செய லாளர் பி.சுந்தரராஜன் வரவேற்றார். நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியா ளர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் எம்.பாலசுப்பிரமணியம் உண்ணாவிர தத்தைத் தொடக்கி வைத்தார். இதில் நகராட்சி, மாநகராட்சி ஊழி யர்களுக்கு பணியிட மாறுதல் கலந் தாய்வு மூலம் மேற்கொள்ள வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல் படுத்த வேண்டும், மாநகராட்சி, நகராட் சிகளில் வரி விதிப்பு எண்ணிக்கைக்கு ஏற்ப வருவாய் உதவியாளர் பணியிடங் களைத் தோற்றுவிக்க வேண்டும், கொரோனா ஊக்க ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒருங்கிணைப்புக் குழு வின் மாநில துணைப் பொதுச் செயலா ளர் ஆர்.குமரவேல், தொழில்நுட்ப பணி யாளர் சங்க மாநிலப் பொதுச் செயலா ளர் ஆர்.பிரேம்குமார், மாநகராட்சி, நக ராட்சி அலுவலர்கள் சங்க செயலாளர் மா.சக்திவேல் உள்ளிட்டோர் விளக்கிப் பேசினர். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலை வர் ஏ.ராணி உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். சகோதர சங்கங்களைச் சேர்ந்த கே.முருகன், த.ஆனந்த், எம். ஜெகநாதன் உள்ளிட்டோர் சிறப்புரை ஆற்றினர். சிஐடியு ஊரக வளர்ச்சி உள் ளாட்சித் துறை ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் உண்ணாவி ரதத்தை நிறைவு செய்து வைத்துப் பேசி னார். உடுமலைப்பேட்டை கிளைச் செய லாளர் எல்.செல்வகுமார் நன்றி கூறி னார்.