ஈரோடு, ஜன.9- புன்செய் புளியம்பட்டி நகராட்சி நிர் வாகத்தைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணியினர் புன்செய் புளியம்பட்டி பேருந்து நிலையம் அரு கில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள னர். ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம் பட்டியில் உள்ள சந்தையில் இறைச்சி கடைகள் செயல்பட்டு வந்தன. இதில் உரிய கட்டணம் செலுத்தி நடத்தி வந்த மாட்டிறைச்சி கடைகளை நகராட்சி நிர்வாகம் எந்தவித அறிவிப்புமின்றி சட்ட விரோதமாக இடித்து, அகற்றியது. இதுகுறித்து சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்த மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணியினர் பல் வேறு முறையீடுகளைச் செய்தனர். இத னைத்தொடர்ந்து போராட்ட அறிவிப் பும் வெளியிடப்பட்டது. இந்நிலை யில், நகராட்சி ஆணையர் பேச்சுவார்த் தைக்கு அழைத்ததன் பேரில், 3 மாதங் களுக்குள் தீர்மானம் நிறைவேற்றி நிரந்தரமாக கடைகள் கட்டித்தரப்படும் என்று உடன்பாடு ஏற்பட்டது. ஆனால் அதுவரை கடைகள் செயல்பட அனு மதிக்கப்படவில்லை. இதனால் பாதிக் கப்பட்டவர்களுடன் உண்ணாவிரத போராட்டத்திற்கு அழைப்பு விடப்பட் டது. அதன்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பவானிசாகர் ஒன்றிய செயலா ளர் டி.சுப்பிரமணி தலைமையில் உண் ணாவிரதம் நடைபெற்றது. இதில், தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட தலைவர் பி.பி.பழனிசாமி, ஒன்றிய தலைவர் ஏ.பி.ராஜு, செயலாளர் பி. ஜெகநாதன், சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர் ப.மாரிமுத்து மற்றும் இறைச்சிக்கடை உரிமையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.