தருமபுரி, டிச.24- தருமபுரியில் சிப்காட் அமைக் கும் பணிக்கு விவசாய விளைநிலங் களை கையகப்படுத்தக்கூடாது என வலியுறுத்தி மாவட்ட ஆட்சிய ரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங் கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. தருமபுயில் சிப்காட் வளாகம் அமைப்பதற்காக அதகப்பாடி, தடங்கம், அதியமான் கோட்டை, பாலஜங்கமன அள்ளி ஆகிய இடங் களில் 1183.05 ஏக்கர் புறம்போக்கு நிலங்கள், 550.35 ஏக்கர் பட்டா நிலங்கள் என மொத்தம் 1733.40 ஏக்கர் நிலங்கள் ஏற்கனவே அடை யாளம் காணப்பட்டது. இந்நிலை யில் நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் தருமபுரியில் சிப் காட் அமைப்பதற்கு மேலும் 1000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப் படும் என முதல்வர் அறிவித்தார். இதனடிப்படையில் சிப்காட் தொழிற் துறை ஆணைய துணை தலைவர் நீரஜ்மிட்டல் நிலம் கையகப்படுத் துவதற்கான இடத்தை பார்வை யிட்டனர். இதைத்தொடர்ந்து, தருமபுரி அருகே உள்ள ஜீவா நகர், ஜாகிர், அதியமான்கோட்டை, பாலஜங்க மன அள்ளி ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கான முயற் சிகள் நடைபெற்று வருகிறது. சிப் காட் அமைக்க தேர்வு செய்யும் இடத்தில் வீடுகள், கிணறு, தென்னை, வாழை, நெல், கேழ் வரகு, மஞ்சள் உள்ளிட்ட பணப் பயிர்கள் விளையும் நிலமாக உள் ளது. இந்த நிலத்தை சிப்காட் அமைப்பதற்காக எடுத்துக் கொண் டால் இந்த நான்கு கிராம மக்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படும். எனவே, விளைநிலங்களை கைய கப்படுத்தக்கூடாது என வலியு றுத்தி பாதிக்கப்படும் விவசாயி கள் 100க்கும் மேற்பட்டோர் வெள் ளியன்று தங்களது விவசாய நிலத் தில் விளையும் பயிர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து மனுகொடுக்கும் போராட் டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங் கத்தின் மாவட்ட தலைவர் கே. என்.மல்லையன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாநில துணைத் தலைவர் டி.ரவீந்திரன், மாவட்ட நிர்வாகிகள் பி.இளம் பரிதி அன்பு,பி.ஜெயராமன்,இ.பி. பெருமாள், தமிழ்நாடு பால் உற் பத்தியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.சின்னசாமி, சிபிஎம் நல்லம்பள்ளி ஒன்றியச் செயலாளர் எஸ்.எஸ்.சின்னராஜ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே. குப்புசாமி, கே.எல்லப்பன் ஆகி யோர் போராட்டத்தை வாழ்த்திப் பேசினர். இப்போராட்டத்தின் முடி வில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சாந்தியிடம், விவ சாயிகள் மனு அளித்தனர்.