தருமபுரி, அக்.10- வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் மற்றும் மனித உயிர் சேதத்தை தடுக்க வலியுறுத்தி தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தினர் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். வனவிலங்குகளால் ஏற்படும் மனித உயிரிழப்பிற்கு வழங்கப் படும் இழப்பீட்டுத் தொகையை ரூ.25 லட்சமாக உயர்த்தி வழங்கி, சம்பவம் நடந்த ஒரு மாத காலத் திற்குள் இழப்பீடு தொகை கிடப் பதை உத்தரவாதப்படுத்த வேண்டும். வேளாண் பயிர் சேதத் திற்கு முழுமையான இழப்பீட்டை கால தாமதமின்றி வழங்க வேண் டும். வனவிலங்குகளால் மனிதர் களுக்கு ஏற்படும் பாதிப்புக்கு முழு மையான மருத்துவ உதவியும், வாழ்வாதார உதவியும் வழங்க வேண்டும். வனவிலங்கு நடமாட் டத்தை குறைக்க வேளாண்மை துறை, வனத்துறை பரிந்துரைத் துள்ள வாசனை திரவியங்கள் முழுமையான மானியத்தில் விவ சாயிகளுக்கு வழங்க வேண்டும்.
காட்டுப்பன்றிகள் பயிர்களை அதிக மாக சேதப்படுத்தும் நிலையில், கேரள மாநிலத்தில் உள்ளதுபோல் காட்டுப்பன்றிகளை அழிப்பதற்கு தமிழக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும். நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக வனத்தையொட்டி சாகுபடி செய்யும் விவசாயிகளை அப்புறப்படுத்த துடிக்கும் முறை யை வனத்துறையினர் கைவிட வேண்டும். வனத்தை ஒட்டியுள்ள விவசாயிகள், மேய்ச்சலுக்கு கால் நடைகளை கொண்டு செல்ல மேய்ச்சல் பாஸ், பட்டிபாஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.குமார் தலைமை வகித்தார். அப்போது சங்கத்தின் மாநிலப் பொருளாளர் கே.பி.பெருமாள் பேசுகையில், இந்தியாவில் யானைகளால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். தமிழ்நாட்டில் 2020 ஆம் ஆண்டில் 58 பேரும், 2021 ஆம் ஆண்டில் 57 பேரும், 2022 ஆம் ஆண்டில் 37 பேரும் இறந்துள்ள தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வனவிலங்குகளால் லட்சக் கணக்கான விவசாய பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகளுக்கு பெருத்த நட்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால், விவ சாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படுவதில்லை.
எனவே, உரிய இழப்பீடு கிடைக்க வனத்துறையும், வரு வாய்த்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வனவிலங்கு கள் வனத்தைவிட்டு வெளியே செல்லாமல் இருக்க, வனத்தில் உரிய உணவு, தண்ணீர் கிடைக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். முன்னதாக, இந்த ஆர்ப்பாட் டத்தில் விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் சோ. அருச்சுனன், மாவட்டப் பொரு ளாளர் சி.வஞ்சி, மாவட்ட துணைத் தலைவர்கள் கே.என்.மல்லையன், எஸ்.தீர்த்தகிரி, டி.ஆர்.சின்னசாமி, ஏ.நேரு, மாவட்ட துணைச்செய லாளர் கே.அன்பு, ஆ.ஜீவானந்தம், பி.சக்கரைவேல், ஆர்.சக்திவேல், ஒன்றிய செயலாளர்கள் பி. முருகன், மாது, எம்.முருகன், தங்க ராஜ், எம்.மகாராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், சங்க தலைவர்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்தனர். மேட்டுப்பாளையம் இதேபோன்று, தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் சார்பில் செவ் வாயன்று மேட்டுப்பாளையம் அடுத்துள்ள காரமடை வனச்சரக அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாயி கந்த சாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செய லாளர் எஸ்.ஆர்.மதுசூதனன், மாவட்டச் செயலாளர் வி.ஆர்.பழனிச்சாமி, துணை செயலாளர் ரவீந்திரன், மேட்டுப்பாளையம் தாலுக்கா செயலாளர் கனகராஜ், காரமடை நகர செயலாளர் சுரேஷ், மாதர் சங்க மாநிலக்குழு உறுப் பினர் ராஜலட்சுமி, மேட்டுப்பா ளையம் பொது தொழிலாளர் சங்கச் செயலாளர் பாஷா மற்றும் பெருமாள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.