districts

img

பாரதியார் பல்கலை., கையகப்படுத்திய நிலங்களுக்கு உரிய இழப்பீடு கேட்டு விவசாய சங்கத்தினர் மனு

கோவை, ஜூலை 29- பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு கையகப்படுத்திய நிலங்களுக்கு, நீதி மன்ற தீர்ப்பின்படியான இழப்பீட்டுத் தொகையை வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மனு அளித்தனர். பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு நிலம் கையகப்படுத்திய சிறு மற்றும்  குறு நில உடமைதார்களின் சார்பில்  இழப்பீட்டுத் தொகையை அதிகரித்து வழங்கக்கோரி கோவை நீதிமன்றத்தில் 1983 ஆம் ஆண்டு முதல் 1986 ஆம்  ஆண்டு வரை தொடுக்கப்பட்ட வழக்கு களுக்கு 2007 ஆம் ஆண்டு கோவை நீதி மன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனை பாரதியார் பல்கலை கழகம் மேல்முறையீடு செய்துள்ளது. இடைக் கால தீர்ப்பின் படியான முழு இழப்பீட் டுத் தொகையை வழங்காமல் ஒரு அர சாணை வெளியிட்டு பகுதியளவுக்கு இழப்பீட்டுத் தொகை மட்டுமே வழங் கப்பட்டது. மீதித் தொகையை வழங்கக் கேட்டு விவசாயிகள் சார்பில் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும், போராட்டங்கள் நடத்தியும் வருகின்றனர். இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் இதுகுறித்து ஆவண செய்வ தாக உறுதியளித்திருந்தார். ஆனாலும், தற்போது வரை இழப்பீடு தொகை வழங் கப்படவில்லை. இதனையடுத்து மீண் டும் ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாக வெள்ளியன்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு  அளித்தனர். 

இதுகுறித்து விவசாயிகள் சங்கத் தின் மாவட்ட செயலாளர் வி.ஆர்.பழ னிச்சாமி கூறுகையில், விவசாயிக ளுக்கு நியாயமாக வழங்கப்பட வேண் டிய இழப்பீட்டு தொகையை உடனடி யாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் மீண்டும் போராட வேண் டிய நிலைக்கு அரசால் தள்ளப்பட்டுள் ளோம். எனவே, நிலங்களுக்கு நீதிமன்ற தீர்ப்பின்படியான இழப்பீட்டை வழங்க வேண்டும். இல்லையெனில் எங்கள்  நிலங்களை எங்களுக்கே திரும்ப வழங்க வேண்டும் என்றார். இதில் ஏரளா மான விவசாயிகள் பங்கேற்றனர்.