ஈரோடு, அக்.2- அந்தியூர் அருகே பட்டுப்புழு வளர்ப்பில் ரூ.10 லட்சத்திற்கும் மேல் நட்டமடைந்ததால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட் டம், வேம்பத்தி பகுதியைச் சேர்ந்த விவசாயி சவுந்தர்ராஜன். பட்டுப்புழு வளர்க்கும் தொழிலில் ஈடுபட முயன்று சுமார் 3 ஏக்கரில் மல்பரி சாகுபடி செய்தார். ஒரு நாற்று ரூ.3 வீதம் சுமார் 15 ஆயிரம் நாற்றுகள் வாங்கினார். இதனை 3 ஏக்கர் பரப் பில் நட்டு வைத்து, 5 அடிக்கு ஒரு கால் வீதம் சாகுபடி செய்தார். மல்பரி இலைகளை உணவாகக் கொள்ளும் பட்டுப்புழு முட்டைகள் 100க்கு ரூ.4 ஆயிரம் வீதம் 240 முட்டைகள் வாங்கி வந்தார். அந்த முட்டை புழுக்களை வைக்க 75 அடி நீளத்தில் 22 அடி அக லம் கொண்ட கொட்டகை அமைத்து, அந்த கீற்றுகள் விரைவில் சேதம டைவதைத் தடுக்கும் வகையில் மேலே தகரங்களை போட்டு, 10க்கு 5 என்ற அளவில் ரேக் அமைத்தும், அதில் முட்டை, புழுக்கள் இட்டு வைத்து, அவை மல்பரி (முசுக் கொட்டை) தலைகளை உண்டு வள ரும் வகையில் அதனை தயார் செய் தார். மல்பரி தலைகளை வெட்டி நாள்தோறும் 3 வேளை பட்டுப்புழுக் களுக்கு உணவாகக் கொடுத்து வந் தார். இவ்வாறு 23 நாட்கள் வளர்ந்த புழுக்கள் நன்கு வளர்ந்தன. இயல் பாக அடுத்த 3 நாட்களில் புழுக்கள் கூடு கட்டத் தொடங்கும். தன்னைச் சுற்றி பட்டு நூலினை வெளியிட்டு கூடு கட்டும். இந்த நூலின் நீளம் சுமார் 1 கி.மீ., எனக் கூறப்படுகிறது. கூட்டினை நசுக்கிப் பார்த்து உரிய பதத்தில் சந்தைக்குக் கொண்டு செல் வர். தற்சமயம் பட்டுக்கூட்டின் விலை ஒரு கிலோவிற்கு ரூ.450 முதல் ரூ.600 வரை கிடைப்பதாகத் தெரிகிறது. இத்தொழிலில் சுமார் ரூ.10 லட்சம் வரை சவுந்தரராசன் கடன் பெற்றுள் ளார். வங்கியில் பயிர் கடன் பெற்ற தால் மீண்டும் பெற முடியவில்லை. அதனால் வெளியில் ரூ.2 வட்டிக்கு கடன் பெற்று, பட்டுப்புழு வளர்ப்பை கடந்த செப்.10 ஆம் தேதி தொடங்கி னார். 3 வாரங்களை கடந்து, 4 ஆவது வாரத்தில் புழு வளர்ந்து கூடு கட்ட வேண்டும். இந்நிலையில், புழுக்கள் இறந்து விட்டதால், சுமார் 240 கிலோ கூடு விற்பனைக்கு வர வேண்டிய நிலையில். வெறும் 10 கிலோ மட்டும் கிடைத்துள்ளது. இதனால் அவர் மிகுந்த நட்டத்திற்கும் ஆளாகியுள் ளார். இவரைப் போன்ற சுமார் 5 ஆயி ரம் ஏக்கர் பரப்பில் 100க்கும் மேற் பட்ட விவசாயிகள் பட்டுப்புழு வளர்ப் பில் ஈடுபட்டனர். அனைவரின் நிலை யும் இவரைப் போன்றதுதான். அர சும், சம்பந்தப்பட்ட துறையும் இழப் பீடு கிடைக்கச் செய்யுமா? என பட்டுக்கூடு விவசாயிகள் எதிர்பார்த் துள்ளனர்.