சேலம், ஜன.21- காவிரி - சரபங்கா நீரேற்றம் திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளின் காலவரை யற்ற பட்டினி போராட்டம் அதிகாரிகள் நடத் திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் காவிரி – சர பங்கா திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஆனால், இத்திட்டம் விவசாய விளை நிலங் கள் வழியாக செயல்படுத்த உள்ளதால், விளை நிலங்கள் பாதிக்கப்படும் நிலை உள் ளது. எனவே, இத்திட்டத்தை விளை நிலங் கள் பாதிக்காத வகையில் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, இத்திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் மேச்சேரி ஒன் றியம், மல்லப்பனூர் பிரிவு, மருத்துவர் லட் சுமி நரசிம்மன் தோட்டத்தில் காலவரை யற்ற பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த னர். இதைத்தொடர்ந்து மேட்டூர் வட்டாட்சி யர் மற்றும் காவல் துணை கண்காணிப்பா ளர் ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை மேற்கொண்டனர். இதில், இது குறித்து திட்ட அலுவலர், சார் ஆட்சியரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என தெரிவித்தனர். இந்த வாக்குறு தியை ஏற்று போராட்டத்தை ஜன.24 ஆம் தேதி வரை விவசாயிகள் ஒத்தி வைத்த னர். மேலும், உரிய நடவடிக்கை எடுக்க வில்லை எனில் ஜன.25 தேதி பட்டினி போராட் டம் தொடங்கும் என விவசாயிகள் சங்க தலைவர்கள் கூறியுள்ளனர். முன்னதாக, விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் பி.தங்கவேலு தலைமை யில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்ட செயலாளர் ஏ.ராமமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் கே.சி.வைத்தியலிங்கம், சிபிஐ மாநிலக்குழு உறுப்பினர் கேவி.ராசேந்தி ரன், சிபிஎம் ஒன்றிய செயலாளர் ஜி.மணி முத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.