districts

img

தக்காளி வரத்து குறைவு - விவசாயிகள் வருத்தம்

திருப்பூர், மே 8- வெயிலின் தாக்கத்தால் சந்தைகளுக்கு தக்காளி வரத்து குறைந்ததன் காரணமாக, சாகுபடி செய்யப்பட்ட தக்காளிகளுக்கு உரிய விலை கிடைக்காமல் இருப்பது வருத் தமளிப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின் றனர். திருப்பூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடும் வறட்சி நிலை காணப்படுவதால், தக்காளி சாகுபடி பெருமளவு குறைந்துள்ளது. இத னால், திருப்பூர் சந்தைக்கும் தக்காளி வரத்து  குறைந்துள்ளது. ஆனால் விலை உயர வில்லை. 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.250 முதல் 350 வரை மட்டுமே விற்பனையாகிறது.  இதுகுறித்து விவசாயிகள் கூறியதா வது, பட்டம்பாளையம், மலையப்பாளை யம் உள்ளிட்ட பகுதியில் ஒரு சிலர் மட்டுமே  தக்காளி சாகுபடி செய்கின்றனர். இப்பகுதி  வானம் பார்த்த பூமி என்பதால், பெரும்பா லான விவசாயிகள், நிலக்கடலை விவசாயத்தில் ஈடு படுகின்றனர். சிலர் மட்டுமே கிணற்று நீரை  நம்பி தக்காளி வகைகளை சாகுபடி செய்து  வருகிறோம். இப்போது வெயிலின் தாக்கம்  கடுமையாக உள்ளதால் தக்காளி செடிகள்  பாதிக்கப்படுகின்றது. இதனால் சந்தைகளுக் கும் தக்காளி வரத்து குறைவாகவே உள்ளது.  நல்ல விலை கிடைக்கும் என நம்பியிருந் தோம். ஆனால், இப்போது உள்ளூர் வியாபா ரிகள் மட்டுமே கொள்முதல் செய்வதால், விலை உயராமல் உள்ளது. இந்தக் கடுமை யான வறட்சி காலத்திலும் கிணற்று நீரை வைத்து தக்காளி சாகுபடி செய்தும் உரிய விலை கிடைக்காமல் இழப்பு ஏற்படுவது வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளனர்.