சூலூர், டிச.15 - தில்லியில் விவசாயிகள் போராடியதை போன்று ஒன்றிய, மாநில அரசுகளை கண்டித்து ஜூலை 5ஆம் நாள் தொடர் காத்தி ருப்பு போராட்டத்தை நடத்த உள்ளதாக தென்னை உழவர்கள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள செஞ்சேரிமலை பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தென்னை உழவர்கள் கோரிக்கை மாநாடு நடை பெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதி களில் இருந்து ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த மாநாட்டில் பங்கேற் றனர். இந்த மாநாட்டை இந்திய விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் தியாகத் பங்கேற்று சிறப்புரையாற்றினார். இதில், தமிழக விவசா ய பாதுகாப்பு சங்க நிறுவனத் தலைவர் ஈசன் மற்றும் விவ சாய சங்க பிரதிநிதிகள் மற்றும் நிர்வாகிகள் மாநாட் டில் பங்கேற்றனர். இது குறித்து தமிழக விவசாயி கள் பாதுகாப்பு சங்க நிறு வனத் தலைவர் ஈசன் செய்தி யாளர்களிடம் கூறுகையில், இந்த மாநாட்டில் ஏழு தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில், தேங்காய் கொள்முதல் விலையை ஒன்றிய அரசு 150 ரூபாயாக உயர்த்த வேண்டும், கொள்முதல் 250 கிலோவில் இருந்து 500 கிலோவாக உயர்த்த வேண்டும்.தேங்காய் எண்ணெயை நியாய விலை கடைகளில் விற் பனை செய்ய வேண்டும்.தென்னைக்கு பர வும் வாடல் நோயை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்த வருடம் வருகின்ற உழவர் தினத்தன்று தில்லி யில் நடைபெற்றது போல தென்னை விவசாயி கள் ஜூலை 5ஆம் நாள் தொடர் காத்தி ருக்கும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார்.