திருப்பூர், நவ.16- ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய பகுதிகள் தெரு நாய் கடிப்பதால் ஆடுகள் பலியா கி வருகிறது.எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் எனத் தமிழ்நாடு விவசா யிகள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம், செங்கப்பள்ளி ஊராட்சி யில் நல்லகவுண்டம்பாளையம், சென்னிமலைபாளையம் பகுதியில் தெரு நாய்கள் கூட்டமாய் சேர்ந்து ஆடுகளைக் கடித்துக் கொன்று கால் நடை வளர்ப்போருக்கு பெரும் இழப்பை ஏற்படுத்து வருகிறது. எனவே தெரு நாய்களைக் கட் டுப்படுத்த வேண்டும் என்றும், கொல்லப்பட்ட ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரி தமிழ்நாடு விவசா யிகள் சங்கத்தின் சார்பில் சார்பில் ஊத்துக்குளி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.குமார், தாலுக்கா குழு உறுப்பினர் பழனி சாமி மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நல்லசாமி, சுப்பி ரமணி, ஹரிஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.