districts

img

வங்கியில் அடகு வைத்த நகைகளை திருப்பி கேட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, ஆக.17- வங்கியில் அடகு வைத்த நகை களை திரும்பக் கேட்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு கிராம வங்கி முன் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம், சத்திய மங்கலம் அருகே டி.ஜி.புதூரில் தமிழ்நாடு கிராம வங்கி இயங்கி வருகிறது. இதில் விவசாயிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் தங்கள் நகையை அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளனர். இவற்றை திரும்பக் கேட்ட போது, வங்கியின் முன்னாள் மேலாளர் மணிகண்டன் கையாடல் செய் தது தெரியவந்தது. இதனையறிந்து  வங்கிக்குக்குச் சென்ற விவசாயி கள் உள்ளிருப்பு போராட்டம் நடத் தினர். இதையடுத்து, கையாடல் செய்த மேலாளர் கைது செய்யப் பட்டுள்ளார். ஒரு பகுதி நகையை மீட்டுள்ளோம் விரைவில் நகையை  திரும்பக் கொடுக்க ஏற்பாடு செய் கிறோம் என அதிகாரிகள் தெரிவித் தனர். இதனால் உள்ளிருப்பு போராட்டம் கைவிடப்பட்டது. இதன் பின்னர் 6 மாதங்கள்  கடந்த நிலையில், கையாடல் செய் யப்பட்ட நகைகள்

திரும்ப அளிக் கப்படவில்லை. அதேசமயம் வங்கி  நிர்வாகம் நகை அடமான கடன் களை புதுப்பித்துக் கொள்ள வலி யுறுத்துகிறது. செயலாக்கக்  கட்டணம் பெ றப்படுகிறது. வட்டி யும் கூடுதலாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விவசாயிகளும், வாடிக்கையாளர்களும் தங்கள் நகைகளை திரும்பப் பெற முடி யாமல் சங்கடங்களுக்கும், மன  உளைச்சலுக்கும் ஆளாகி வருகின் றனர். இந்நிலையில், தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் சார்பி்ல் உடனடியாக நகையை திரும்பக் கொடுக்க வேண்டும். வட்டியை ரத்து செய்ய வேண்டும். புதுப் பிக்கும்போது செயலாக்கக் கட் டணம் வசூலிக்கக் கூடாது என வலி யுறுத்தி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கரும்பு விவசாயிகள் சங்க  நிர்வாகி கே.பி.சின்னச்சாமி தலை மையில், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்வி.மாரி முத்து, செயலாளர் ஏ.எம்.முனு சாமி, பொருளாளர் கே.ரத்தனம் மற்றும் விவசாயிகளும், வங்கியின்  வாடிக்கையாளர்களும் திரண் டனர். இதனையடுத்து மண்டல மேலாளர் நேரில் வந்து பேச்சு வார்த்தை நடத்தினார். சேவை கட் டணம் வசூலிக்கப்படாது, குறிப் பிட்ட கெடுவிற்குள் நகைகள் திருப் பியளிக்கப்படும் என எழுத்துப்பூர் வமாக உறுதியளித்தார். இதனை யடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.