கோவை, ஜூலை 24- கோவை - சத்தியமங்கலம் சாலை விரிவாக்கம் செய்ய, விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்த முயல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனர். கோவை - சத்தியமங்கலம் சாலையை விரிவுபடுத்த வேண் டும் என்கிற கோரிக்கையை தொடர்ந்து, குரும்பம்பாளையம் முதல் சத்தியமங்கலம் வரை சுமார் 30 கிலோ மீட்டருக்கு சாலை விரிவாக்கம் செய்ய பணிகள் துவங்க உள்ளன. இந் நிலையில், சாலை விரிவாக்கத்திற்கு விவசாய நிலங்களை கையகப்படுத்த முயற்சிப்பதாக கூறி அன்னூர் சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகள் கோவை மாவட்ட ஆட்சியரிம் மனு அளித் தனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், “சத்தி சாலையை ஏற்கனவே 5 அடிக்கு அகலப்படுத்தி வருகின்றனர். போக்கு வரத்து நெரிசலை தவிற்க இதுவே போதுமானது. ஆனால், விவசாய நிலங்களை கையகப்படுத்தும் முயற்சி நடக்கிறது. இதனால் தென்னை, வாழை, மஞ்சள் உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டுள்ள விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். சுமார் 1000 ஏக்கர் விவசாய நிலம் வீணாகும். இதனை ஒருபோதும் அனு மதிக்கமாட்டோம், என்றனர்.