திருப்பூர், பிப்.23 - டெல்லியில் போராடும் விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தி இளம் விவசாயி படு கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், விவ சாயிகள் மீது கொடூர தாக்குதல் நடத்தும் ஒன் றிய மோடி அரசை கண்டித்தும் பல்லடத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கி சூட்டால் இளம் விவசாயி சுப்கரன்சிங் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொடூர சம்பவத்தை கண்டித்தும், போராடும் விவசாயிகள் மீது கொடூரமான தாக்குதல் நடத்தும் ஒன்றிய மோடி அர சாங்கத்தை கண்டித்தும் தமிழ்நாடு விவசா யிகள் சங்கம் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் கருப்புகொடி கண்டன ஆர்ப்பாட்டம் வெள்ளியன்று பல்லடம் தபால் நிலையம் முன்பு நடைபெற்றது. சங் கத்தின் மாவட்ட தலைவர் எஸ். ஆர்.மதுசூ தனன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் பி.டெல்லி பாபு கலந்து கொண்டு உரையாற்றினார். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செய லாளர் ஆர்.குமார், மாவட்ட பொருளாளர் அ. பாலதண்டபாணி உள்ளிட்ட விவசாய சங்கத் தினர் திரளானோர் கலந்து கொண்டனர்.