districts

img

கால்நடைகளுக்கு மரியாதை செலுத்தி விவசாயிகள்

அவிநாசி,ஜன.16- அவிநாசி சுற்றுவட்டார கிராமப் பகு திகளில் மாட்டுப் பொங்கலான திங்க ளன்று மாடுகளின் கொம்புகளுக்கு வர் ணம் பூசி, பொங்கல் வைத்து விவ சாயிகள் மரியாதை செலுத்தினர். தமிழ்நாடு முழுவதும் தை 1 ஆம்  தேதி பொங்கல் திருநாள், தை  இரண் டாம் நாள் மாட்டுப்பொங்கல்  கொண்டா டப்படுகிறது. அவிநாசி ஒன்றியத்தில் உள்ள 31 ஊராட்சிகளில் 70க்கும் மேற் பட்ட கிராமங்கள் உள்ளன. இதில் ஒரு  சில கிராமப்பகுதிகள் விவசாயம் சார்ந்து  உள்ளது. இதைத்தொடர்ந்து தை முதல் நாளில் விவசாயிகள் மண் ணுக்கு நன்றி செலுத்தும் விதமாகக் பொங்கல் வைத்து சூரியனுக்கு மரி யாதை செலுத்தினர். இதையடுத்து இரண்டாம் நாளன்று விவசாயதிற்குப் பெறும் பங்காற்றும் கால்நடை களுக்கு மரியாதை செலுத்தும் வகை யில், மாடுகளைக் குளிப்பாட்டி மாடு களின் கொம்புகளுக்கு வர்ணம் பூசி, மாலை அணிவித்துப் பொங்கல் வைத்து மாட்டுப்பொங்கல் கொண் டாடினர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறு கையில், தமிழர் திருநாள் தை முதல்  நாள் மண்ணுக்கு மரியாதை செலுத்து வது. தை இரண்டாம் நாள், நவீன தொழில்நுட்பம் வளர்ச்சி அடையாத காலத்திலிருந்து மாடுகளை வைத்துத் தான் மண்ணை உழுவது.  அதன் மூலம் பயிர்களை விதைப்பது  போன் றவை நடைமுறையாக இருந்தது.  காலப்போக்கில் நவீனத் தொழில் நுட்பம்  வளர்ச்சியடைந்த உடன் டிராக் டரை பயன்படுத்துகின்றனர். அதே போல வயல்களுக்கு நீர் இறைப்பதற் கும் மாடுகளைத் தான் பயன்படுத்து வோம். மரச்செக்கு எண்ணெய் இன்றும்  பொதுமக்கள் அதிகமாகப் பயன்படுத்தி  வருகின்றனர். அதுவுமே ஒரு காலகட் டத்தில் மாடுகளை வைத்து செக்கைச் சுற்றுவது மூலம்   எண்ணெய்கள் எடுக் கப்பட்டது. அதுவும் காலப்போக்கில் மாறிவிட்டனர். அன்று உழைப்பிற்கு மூலதனமாக இருந்தது கால்நடைகள் தான் அதற்கு மரியாதை செலுத்தும் வித மாகத்தான் மாட்டுப் பொங்கல் திரு விழா கடைப்பிடிக்கப்படுகிறது என்று தெரிவித்தனர்.