அவிநாசி, அக்.5 - அவிநாசி அடுத்து சேவூர் அருகே சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் ஜெயின் கம்பெனி மூலம் ரூ.3 கோடி மதிப்பிலான வாழைகள் சேதமடைந் துள்ளதாக விவசாயிகள் வேதனையு டன் தெரிவித்தனர். அவினாசி ஒன்றியம் தண்டுக்கா ரன்பாளையம் ஊராட்சி, ராமியம்பா ளையம், குமாரபாளையம், புஞ்சை தாமரைக்குளம், ஆதராம்பாளையம் உட்பட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கு மேற்பட்ட விவசாயிகள் உள்ளனர். அப்பகுதி விவசாயிகள் 2022 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஜெயின் கம்பெனியில் இருந்து வாழைகன்றுகள் விலை கொடுத்து வாங்கியுள்ளனர். இதனை பயிரிட்டு 13 மாதம் ஆகி யும் வாழைத்தார் வளர்ச்சி அடை யவில்லை. இதனைத் தொடர்ந்து விவசாயிகள் வேளாண் துறை அதி காரிகள், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோருக்கு தகவல் தெரிவித் துள்ளனர். இதைத்தொடர்ந்து பாதிக் கப்பட்ட விவசாயிகள் மற்றும் வாழை களை வட்டாட்சியர் பார்வையிட்டார். வாழைக்கன்று வழங்கிய ஜெயின் நிறுவனம், விவசாயிகளை வட்டாட் சியர் அலுவலகத்தில் வெள்ளியன்று பேச்சுவார்த்தைக்கு அழைத்துள் ளார். இதுகுறித்து விவசாயிகள் கூறு கையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஜெயின் நிறுவனத்திடம் இருந்து. வாழைக்கன்று ரூ.40க்கு வாங்கினோம். 13 மாதங்கள் ஆகியும் வாழைத்தாரில் மேலே உள்ள 2 சீப்புகள் மட்டும் பழம் ஆகி விடுகிறது. மற்றவைகள் பிஞ்சு காயை போலவே உள்ளன. இதை பார்த்த வியாபாரிகள் வாழைத்தாரை வாங்க மறுக்கிறார்கள் அதனால் ரூ.700க்கு விற்க வேண்டிய ஒரு வாழைத்தாரை வெறும் ரூ.20-க்கு மட் டுமே வாங்குகிறார்கள். இது பற்றி ஜெயின் நிறுவனத்திடம் கேட்டால் சரியான பதில் கிடைக்கவில்லை. எங்கள் பகுதிகளில் சுமார் 40 ஆயிரம் வாழைக்கன்றுகள் இந்த நிறுவனத்திடம் இருந்து வாங்கி பயி ரிட்டிருந்தோம். இதனால் ரூ.3கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறினர்.