districts

img

காண்டூர் கால்வாயில் குதிக்கும் போராட்டம்

உடுமலை, டிச. 20- பொதுப்பணித்துறை அதிகாரி களின் அலட்சியத்தை கண்டித்து, உட னடியாக நடவடிக்கை எடுக்க வலியு றுத்தி காண்டூர் கால்வாயில் குதிக் கும் போராட்டத்தை விவசாயிகள் அறிவித்த நிலையில், கோட்டாட் சியர் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார்.  திருமூர்த்தி அணைக்கு பிஏபி  தொகுப்பு அணைகளில் இருந்து  தண்ணீர் வரும் காண்டூர் கால்வாய்  கடந்த 9 ஆம்தேதி நல்லாறு நீர் பிடிப்பு பகுதியில் கன மழைக்கு காண்டூர் கால்வாய் கரைப்பகுதிகள் கடுமை யாக சேதம் ஏற்பட்டது. கனமழை யால் கால்வாயின் கரை உடைப்பட்ட தால், இப்பகுதியின் விவசாய நிலங்க ளில் இருந்த தென்னை மரங்கள் சேதம் அடைந்தது. கால்வாயில் கரை  உடைப்புக்கு மழை காரணம் அல்ல  பொது பணித்துறை அதிகாரிகளின் அலட்சியப்போக்கு காரணம் என்று விவசாயிகள் குற்றம்சாட்டினர். மேலும், கடந்த காலங்களில் கால்வா யில் மலைப்பகுதியில் மழை பெய் தால் கால்வாய் பகுதியில் ஷட்டர் திறக்கபடும் ஆனால், இந்த ஷட்டர் முழுவதும் கான்கிரீட் வைத்து அடைக்கப்பட்டதால் மழைநீர் கால் வாய் கரைகளை உடைப்பு ஏற்படுத்தி  விளை நிலங்களை சேதப்படுத்தி யுள்ளது. இது போன்று அலட்சிய மாக செயல்பட்ட பொது பணித்துறை  அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க  வேண்டும். இது குறித்து விரிவான விசாரணை நடத்த கோட்டாட்சியர் தலைமையில் முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர். மேலும், கோரிக்கைகள் நிறைவேற்றாத பட் சத்தில், 23 ஆம் தேதி வறப்பள்ளம் பகு தியில் இருக்கும் காண்டூர் கால்வா யில் விவசாயிகள் குதிக்கும் போராட் டத்தை நடத்த அறிவிப்பு செய்தனர். இதனையடுத்து, 22 ஆம் தேதி  வெள்ளியன்று உடுமலை கோட்டாட் சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் செயற்  பொறியாளர் நீர்வள ஆதாரத்துறை திருமூர்த்தி கோட்டம், காவல்துறை துணைக்கண்காணிப்பாளர், உடு மலை வட்டாச்சியர், திருமூர்த்தி நீர்  தேக்க திட்டக்குழு தலைவர் மற்றும்  உறுப்பினர்கள் மற்றும் உடுமலை விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர் வாகிகள் பேச்சு வார்த்தை நடத்தப் படும் என்று வருவாய் கோட்டாட்சி யர் ஜஸ்வந்த் கண்ணன் தெரிவித்துள் ளனர்.