districts

img

வாய்க்காலை அழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சார் ஆட்சியரிடம் விவசாயிகள் நேரில் வலியுறுத்தல்

திருப்பூர், மார்ச் 21 – பல்லடம் விரிவாக்க கிளை  வாய்க்காலை அழித்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதுடன், அந்த வாய்க் காலை காங்கிரீட் வாய்க்கா லாக அமைத்துத்தர வேண்டும்  என்று சாமளாபுரம் கிராம நீரி னைப் பயன்படுத்துவோர் சங் கத் தலைவர் வை.பழனிசாமி கோரியுள் ளார். திருப்பூர் சார் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய்  நாராயணன் தலைமையில் செவ்வாயன்று திருப்பூர் கோட்ட விவசாயிகள் குறை தீர்க்  கூட்டம் நடைபெற்றது. இதில் வாய்க்கால்  உடைத்து அழிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட  விவசாயிகள் சார்பில் மனு அளித்து முறை யிட்டனர். அம்மனுவில் கூறியிருப்பதாவது:  பல்லடம், சாமளாபுரம், பூமலூர் கிரா மத்தில் சர்வே எண்கள்: 266, 252, 243, 244  ஆகியவற்றில் 1982ஆம் ஆண்டு கிளை  வாய்க்கால் வெட்டப்பட்டது. இதில் பல்லடம்  விரிவாக்க கால்வாய் மடை எண் 22இல் 1991 ஆம் ஆண்டு முதல் அரசுக்குச் சொந்தமான கிளை வாய்க்கால் மூலம் 158 ஏக்கர் நிலம் பாசனம் பெற்று வருகிறது. பூமலூர் கிராமம் சர்வே எண் 252/1பி-இல்  தென் வடலாக கிளை வாய்க்கால் சென்று வந் தது.

கோடங்கிபாளையம் மௌனசாமி மகன் கள் பிரகாஷ், அசோக்குமார் ஆகியோர் கன ரக பொக்லைன் இயந்திரத்தை வைத்து சுமார்  400 அடி நீளத்திற்கு இதை முற்றாக அழித்து 5,  6 அடி பள்ளம் தோண்டியுள்ளனர். கடந்த 2020 ஜூலை 23அம் தேதி பல்லடம்  பத்திரப் பதிவு அலுவலகத்தில் 7146/2020 எண் ணாகப் பதிவு செய்த கிரைய ஆவணத்தின் மூலம் மேற்கண்ட இருவரும் 3.80 ஏக்கர்  நிலம் கிரையம் பெற்றுள்ளனர். கிரையம் பெற் றதில் இருந்து பல முறை வாய்க்காலை சேதப் படுத்தி வந்தனர். சாமளாபுரம் கிராம நீரி னைப் பயன்படுத்துவோர் சங்கத்தைச் சேர்ந்த நாங்கள் தொடர்ந்து அரசுக்கு மனுக்  கொடுத்து வருகிறோம். 158 ஏக்கர் விவசாயப் பாசனம் பெற்று  வந்த, அரசுக்குச் சொந்தமான வாய்க்காலை  முற்றாக அழிப்பதற்கும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்தும் கிளை வாய்க் காலை மறைத்தும் கல்குவாரி உரிமம் கடந்த 2022 ஜூலை 7 அன்று வழங்கப்பட்டுள்ளது. அந்த கல்குவாரி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். மேற்கண்ட நபர்கள் மீது சட் டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அழிக் கப்பட்ட கிளை வாய்க்காலை தண்ணீர் தேங் காமல் செல்லும் வகையில் காங்கிரீட் வாய்க் காலாக அமைத்துத் தர வேண்டும். பூமலூர்  கிராமத்தில் பல்லடம் விரிவாக்கக் கால்வாய்  மடை எண் 20 முதல் 24 இல் உள்ள கிளை  வாய்க்கால் நிலங்களை அளந்து அத்துக் கல்  நட்டு, உட்பிரிவு செய்து தரும்படியும் விவசா யிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.