districts

விவசாயிகள் குறைதீர்க் கூட்டம் அர்த்தமற்ற விவாத மண்டபமா?

திருப்பூர், நவ. 24 – திருப்பூர் மாவட்ட விவசாயிகளுக்கு பய னளிக்கும் முறையில் விவசாயிகள் குறை தீர்க் கூட்டத்தை மாவட்ட நிர்வாகம் நடத்த  வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்து கின்றனர். தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களி லும் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க் கூட் டங்கள் நடத்தப்படுகின்றன. அதன் ஒரு பகுதி யாக திருப்பூர் மாவட்டத்திலும் விவசாயிகள்  குறைதீர்க் கூட்டங்கள் நடத்தப்படுகிறது. ஆனால் இதில் விவசாயிகள் வாழ்வாதாரம்  தொடர்புடைய அடிப்படைப் பிரச்சனை களை முன்வைத்து அதை அரசின் கவனத் துக்கு கொண்டு செல்லவும், உரிய தீர்வு காண வும் பல விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். விவசாயிகள் குறைதீர்க் கூட்டம் நடத்து வது குறித்து மாவட்ட நிர்வாகம் முறையாக  அறிவிப்புச் செய்கிறது. எனவே மாவட்டத் தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயி கள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் வருகின்றனர். ஆனால் சமீப நாட்களாக தன் னார்வலர்கள் என்ற பெயரில் சிலர் இக்கூட் டங்களில் பங்கேற்க பெயர்ப் பதிவு செய்து  கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

மாவட்ட நிர்வா கம் இக்கூட்டத்தை நடத்தும்போது முறைப்ப டுத்தி அனைத்துத் தரப்பினரும் கருத்துத்  தெரிவிக்கவும், அதன் மீது நடவடிக்கை எடுக் கவும் ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்கு  மாறாக பெயர் கொடுத்தவர்கள் வரிசை யாகப் பதிவு செய்து கொண்டு ஒவ்வொருவ ராக பேச வாய்ப்பளிக்கின்றனர். இதை பயன் படுத்திக் கொண்டு சில தன்னார்வலர்கள் அடிப்படைப் பிரச்சனைகள் பற்றி அரசின் கவ னத்தை ஈர்ப்பதற்கு மாறாக குறிப்பிட்ட சில தனிப்பட்ட பிரச்சனைகளை முன்னுக்கு வைத்து நெடுநேரம் பேசுகின்றனர். அவர் களை ஒழுங்குபடுத்தவோ, அப்பிரச்சனை கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைத் தெரிவித்து விரைந்து தீர்வு காணவோ வேளாண் துறையினர் கவனம் கொள்வ தில்லை. இது போன்ற சூழ்நிலையில் விவசாயி கள், விவசாய அமைப்பினர் நெடு நேரம் காத் திருந்தாலும் அவர்கள் பிரச்சனைகளை முன் வைக்க முடிவதில்லை. குறிப்பாக தற்போது  பருவமழை பெய்வது, பாசன வசதி, விதை,  பூச்சிமருந்து, விவசாயக் கடன், விளைபொ ருட்களுக்கு கட்டுபடியான விலை கிடைக்கா தது உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சனைகளை  விவசாயிகள் பேச வேண்டியிருக்கும். அதற்கு முன்னுரிமை கொடுக்காமல், ஏதே னும் ஒரு பகுதியில் நடக்கக்கூடிய தனிப்பட்ட  விவகாரங்களை சொந்த ஆதாயத்துக்காக தன்னார்வலர்கள் என்ற பெயரில் பேசுவோர் நீண்ட நேரம் எடுத்துக் கொள்வதை அதிகாரி கள் அனுமதிக்கின்றனர். இதற்கு விவசாய அமைப்பினர் ஆட்சே பம் தெரிவித்து, உண்மையான விவசாயிக ளுக்கு பயனளிக்கும் விதத்தில் விவசாயிகள்,  விவசாய சங்கத்தினர் ஆகியோருக்கு முன்னு ரிமை அளித்து குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி பேச  அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்து கின்றனர்.

என்ன காரணத்தாலோ வேளாண் துறையினர் இதை நடைமுறைப்படுத்தாமல் உள்ளனர். அதேபோல் மாவட்ட அளவிலான கூட்டங் களுக்கு முன்னதாக கோட்ட அளவிலான விவசாயிகள் கூட்டம் நடத்தப்படுகிறது. அந்த  கூட்டங்களில் பேசித் தீர்வு காண வேண்டிய விசயங்களை அந்த மட்டத்தில் தீர்த்துக் கொள்ளவும், பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை, சிக்கலான, தீராத  பிரச்சனைகள், நிர்வாகத்தினர் கண்டு கொள்ளாத பிரச்சனைகளை மாவட்ட அள வில் பேசித் தீர்வு காண வாய்ப்பளிக்க வேண் டும் என்று விவசாயிகள் வலியுறுத்துகின்ற னர். விவசாயிகளுக்கு பயனளிக்கும் முறை யில் இக்கூட்டங்களை நடத்தாதபோது, உண் மையில் நிவாரணம், தீர்வு தேடி வரக்கூடிய  விவசாயிகள் இனி இங்கு வந்து பயனில்லை  என்று சோர்வடைந்து இதுபோன்ற கூட்டங்க ளுக்கு வருவதைப் பற்றி யோசிக்கும் நிலை  ஏற்படுகிறது. சுய விளம்பரம் தேடுவோர், தன் னார்வலர்கள் என்ற பெயரில் வரக்கூடிய போலி விவசாயிகளின் அர்த்தமற்ற விவாத  மண்டபமாக விவசாயிகள் குறை தீர்க் கூட்டம்  மாறிப் போகிறது. எனவே மக்கள் வாழ்வின்  அச்சாணியாகத் திகழும் விவசாயிகளின் உள் ளக் குமுறலை அறிந்து மாவட்ட நிர்வாகம்  இப்பிரச்சனையில் உரிய முறையில் தலை யிட்டு தீர்வு காண வேண்டும் என்று பல்வேறு  விவசாயிகள் சங்கத்தினர், விவசாயிகள் எதிர் பார்க்கின்றனர்.