உடுமலை, செப்.10- அணைகளிலிருந்து தண்ணீர் திறந்து விடு மாறு உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உடுமலை மற்றும் மடத்துக்குளம் ஆகிய தாலுகா பகுதிகளில் அதிகளவில் கிராமங் கள் உள்ளன. இப்பகுதியில் வசிப்பவர்கள் முக்கிய தொழிலாக இருப்பது விவசாய மாகும். தற்போது இப்பகுதி வறட்சியாக உள்ளது. இதனால், விளைநிலம் மற்றும் கால் நடைகளுக்கு போதிய தண்ணீர் கிடைப்பது இல்லை. மேலும், வரும் மாதங்களில் வெயில் தாக்கம் அதிகமாக இருக்குமென கூறப்படு கிறது. தற்போது, உடுமலை மற்றும் மடத்துக் குளம் பகுதியில் உள்ள குளம், குட்டைகள் நீரியின்றி காணப்படுகிறது. இதனால், மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளுக்கு தண்ணீரின்றி அவதிப்படுகின்றன. திருமூர்த்தி மற்றும் அமராவதி அணை களில் இருந்து தண்ணீர் திறந்து குளம், குட்டைகளில் நிரப்பிட வேண்டும். இதனால், குளம் மற்றும் குட்டைகளுக்கு தண்ணீர் இருந்தால் சுற்று வட்டார பகுதியின் நிலத்தடி நீர் மட்டம் உயரும். இதனால் ஆழ்குழாய்கள் மூலம் மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யவும், கால்நடைகளுக்கு தண்ணீர் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். எனவே, திருமூர்த்தி மற்றும் அமராவதி அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.