உடுமலை, ஏப்.29- அமாரவதி அணையை தூர்வார பொது பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துவுள்ளனர். அமராவதி அணையின் நீர், விவசா யிகளின் பாசன வசதியையும், ஆயிரக்க ணக்கான கிரமாங்களின் குடிநீர் தேவை யையும் பூர்த்தி செய்யும் முக்கிய அணையாக உள்ளது. திருப்பூர் மாவட் டம் உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கட்டப்பட்டுள்ளது அம ராவதி அணை. இதில் இருந்து பல லட்சக்கணக்காண விவசாய நிலங்க ளுக்கும், சில மாவட்ட மக்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்து வருகி றது. இந்நிலையில், அணையின் மொத்த கொள்ளவு நீர் தேக்கத்தில் பெரும் அள விற்கு வண்டல் மண் மேடாக இருந்து வருகிறது. இதனால் மழை காலங்களில் அதிமான நீர் தேக்க முடியாமல் சேமிக்க வேண்டிய நீரை ஆற்று பகுதியில் திறக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்படுகிறது. எனவே, மழை காலங்களில் நீரை சேமிக்கும் வகையில் அமராவதி அணையை தூர்வார வேண்டும். மேலும் தூர்வரும் வண்டல் மண்களை இப்பகுதி விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி, அணையில் மொத்த கொள்ளவான 90 அடியில் தற்போது 40 அடி மட்டுமே நீர் உள்ளது. மேலும் அணையின் நீர் பிடிப்பு பகுதி களில் மழையில்லாத காரணத்தால் நீர் வரத்து மிகவும் குறைவாக உள்ளது. இந்நிலையில், அணையின் நீர் வரத்து பகுதியில் இருந்து மண் எடுத்தால் அணையின் நீர் கொள்ளவு அதிமாகும் என்று விவசாயிகள் கூறினர்.