திருப்பூர், செப். 1 – உடுமலைபேட்டை வேளாண் பொறியியல் அலுவலகத்தை இடம் மாற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரியுள்ளனர். திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க் கூட்டத்தில் வியாழனன்று விவசாயிகள் கூறியதாவது: கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி அர சாணைப்படி கடன் தள்ளுபடி சான்றிதழ் பெற்ற விவசாயிகள் சிலர் வெளிக்கடன் பெற்று கடனை செலுத்தியிருந்தனர். தற் போது தள்ளுபடி கடனுக்கான தொகையை கூட்டுறவு சங்கங்களுக்கு அரசு அனுப்பியுள்ளது. இதுநாள் வரை அந்த தொகை விவசாயிகளுக்கு பட்டு வாடா செய்யப்படவில்லை. உடனடி யாக அந்த தொகையை சிரமத்தில் இருக்கும் விவசாயிகள் நலன் கருதி வழங்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. உடுமலை தாலுக்கா சர்க்கார் புதூர் விவசாயி எம்.சுப்பிரமணியம் கடன் தள் ளுபடி சான்றிதழ் பெற்றுள்ளார். அவ ருக்கு உரிய கடன் தள்ளுபடி தொகை இன்னும் வழங்கப்படாத நிலையில் மருத்துவ சிகிச்சை பெற்று கடும் சிர மத்தில் இருப்பதால் தனது கடன் தள்ளுபடி தொகை ரூ.1.30 லட்சத்தை வழங்கும்படி கேட்டுக் கொண்டார். உடுமலைபேட்டை வேளாண்மை பொறியியல் அலுவலகம் புறநகரில் உள்ள சங்கர்நகருக்கு மாற்றப்பட்டுள் ளதால் விவசாயிகள் அங்கு வந்து செல்ல சிரமப்படுகின்றனர்.
பொள்ளாச்சி, பழனி பகுதிகளில் வேளாண்மை பொறியியல் அலுவல கம் வேளாண்மை துறை சார்ந்த தோட் டக்கலை, மார்க்கெட்டிங் கமிட்டி உள்ள ஒரே இடத்தில் அமைந்துள்ளது. அது போல் உடுமலையிலும் இந்த அலுவல கங்கள் உள்ள பகுதியில் போதுமான இடம் இருப்பதால் வேளாண்மை பொறி யியல் துறை அலுவலகத்தை அங்கு மாற்ற வேண்டும் என்று விவசாயிகள் கேட்டுக் கொண்டனர். கடந்த ஏப்ரல் முதல் மூன்று மாதங்களாக வழங்கிய கோரிக்கை மனுக்கள் மீது எவ்வித பதி லும், நடவடிக்கையும் இல்லை. இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும். பெரியவாளவாடியில் இருந்து சர்க் கார் புதூர் செல்லும் சாலையை தார்ச்சா லையாக மாற்றித் தர வேண்டும். பெரிய வாளவாடியைச் சேர்ந்த சீதாபதி என் பவர் அளித்த மனுவில், வருவாய் துறை கிராம உதவியாளராக பணியாற்றும் தி. திலீப் என்பவர் தனது வீட்டுக்கு முன் புள்ள 70 சதுரமீட்டர் இடத்தில் இருந்த அரசமரம், விநாயகர் கோயில் ஆகிய வற்றை தனது அதிகாரத்தைப் பயன் படுத்தி அகற்றி விட்டார். அத்துடன் தனது வீட்டை விரிவுபடுத்தி கட்டி முழு மையாக சட்டவிரோதமாக ஆக்கி ரமிப்பு செய்துள்ளார். பெரிய வாளவாடி வரதராஜ பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான, தரிசாக உள்ள கோவில் நிலத்தைப் பொது ஏலம் விட வேண்டும். அதில் கிடைக்கும் வருமானத்தில் கோயில் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.