திருப்பூர், மே 8- திருப்பூர் மாவட்டத்தில் நிலவும் கடுமையான வறட்சியினால், தென்னை உள்ளிட்ட பயிர் பாதிப்புகளை உரிய ஆய்வு செய்து, இழப்பீடு வழங்க தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் புதனன்று ஆட்சியர் தா. கிருஸ்துராஜை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இதில், திருப்பூர் மாவட்டத்தில் வட மேற்கு மற்றும் தென்கிழக்கு பருவ மழை பொய்த்து போனதன் காரணமா கவும், பிஏபி தொகுப்பு அணைகளில் போதுமான நீர் இருப்பு இல்லாத நிலைமையாலும், மாவட்டத்தில் லட்சக் கணக்கான ஏக்கர் நிலங்களில் பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் பிரதான பயிரான தென்னை இந்த கடுமையான வெயி லுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் ஆயி ரக்கணக்கான ஏக்கரில் காய்ந்து வரு கிறது. மக்காச்சோளம் உள்ளிட்ட தீவ னப் பயிர்களும் மற்றும் வெங்காயம் உள்ளிட்ட காய்கறி பயிர்களும் இந்த வறட்சியை சமாளிக்க முடியாமல் மடிந்து வருகிறது. ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளாக தேங்காய் உள்ளிட்ட விவசாயிகள் உற்பத்தி பொருட்க ளுக்கு கட்டுபடியான விலை கிடைக் காத சூழ்நிலையில் தற்போது கடும் வறட்சியாலும் பாதிப்புக்கு ஆளாகி யுள்ளனர். விவசாயிகள் வைத்துள்ள கால்நடைகளுக்கு போதுமான தீவனம் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே திருப்பூர் மாவட்டத்தில் வறட் சியால் ஏற்பட்டிருக்கும் நிலைமை களை உடனடியாக போர்க் கால அடிப் படையில் மாவட்ட நிர்வாகமும், தமிழ் நாடு அரசும் ஆய்வு செய்து உரிய இழப்பீடுகளை வழங்குவதோடு, உரிய மாற்று ஏற்பாடுகளை செய்து விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த மனு அளிக்கை யில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.குமார், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க அமராவதி கூட்டுறவு ஆலை கிளை செயலாளர் எம்.எம்.வீரப்பன், தமிழ் நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.கே.கொளந்த சாமி, மடத்துக்குளம் தாலுகா தலை வர் வி.ராஜரத்தினம் ஆகியோர் பங் கேற்றனர்.