districts

img

தரம் இல்லாத போலி விதை தயாரிக்கும் நிறுவனங்கள் விவசாய குறைதீர்ப்பு கூட்டத்தில் விவசாயிகள் புகார்

உடுமலை, பிப்.17- விவசாயிகளை ஏமாற்றும் வகை யில் தரம் இல்லாத போலி விதைகளை தயாரிக்கும் நிறுவனங்கள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வெள் ளியன்று நடைபெற்ற விவசாய குறை தீர்ப்பு கூட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் புகார் தெரிவித்தனர். உடுமலை கோட்டாட்சியர் அலுவ லகத்தில் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் தலைமையில் நடைபெற்ற விவசாய குறைதீர்ப்புக் கூட்டத்தில் விவ சாயிகள் கூறியதாவது, வருவாய் துறை யால் நீர் வழித்தடங்களை அளவீடு செய்த பின்பு  அங்கு இருக்கும் ஆக்கிர மிப்புகளை அகற்றாமல் இருப்பது மீண் டும் ஆக்கிரமிப்பு செய்ய வழிவகை செய்யும் என்றும், உடுமலை தாலுகா மருள்பட்டி கிராமத்தில் பொது மக்கள்  நிதியில் கட்டப்பட்ட பால் கொள்முதல்  கட்டிடத்தை தனி நபர் ஆக்கிரமிப்பு செய் துள்ளார் அதை மீட்டு தர வேண்டும். விவ சாயிகள் பயன்படுத்தி வரும் வாகனங் களை தடுத்து காவல்துறையினர் பணம்  பறிப்பதை தடுக்க வேண்டும். மடத்துக் குளம் பகுதியில் உள்ள அமராவதி கூட் டுறவு சக்கரை ஆலையில் வரும் மார்ச்  மாதம் அறவை தொடங்கும் நிலையில் அங்கு உள்ள இயந்திரங்களை முறை யாக பராமரிப்பு செய்ய வேண்டும்.  வரும் காலங்களில் கால்நடைக ளுக்குக் கோமாரி நோய் தாக்குதலை தடுக்க தடுப்பு ஊசி போட சிறப்பு முகாம் களை நடத்த வேண்டும். தென்னை மரங் களுக்கு இனக்கவர்ச்சி பொறிகளை தர மாகவும் குறைந்த விலைக்கு வேளாண் துறை வழங்க வேண்டும். அதே போல் உரம் விற்பனை செய்யும் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து தரம் இல் லாத உரங்களை விற்பனை செய்யும் தனியார் உரக்கடைகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். உடுமலை மற் றும் மடத்துக்குளம் பகுதிகளில் அரசு  விதிகளுக்கு மீறி எந்த வித கட்டுப்பாடு களும் இல்லாமல் கிராவல் மண் எடுப் பதை தடுக்க வேண்டும். ஏற்கனவே எரிச னம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும்  மின்வாரிய அலுவலகத்தை மாற்ற கூடாது என்று விவசாயிகள் கூறினார் கள். இந்த கூட்டத்தில் வட்டாட்சியர் கண் ணாமணி, தமிழ்நாடு விவசாயச் சங்கத் தின் நிர்வாகிகள் எஸ்.ஆர். மதுசூதனன்,  பாலதண்டபாணி, ஸ்ரீதர், அருண்பிர காஷ், மகேந்திரன், ரத்தினகுமார், கும ரகுரு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செளந்தர்ராஜ், ஜல்லிபட்டி கோபால் உள்ளிட்ட விவசாயிகள் மற்றும் பல் வேறு துறை அரசு அதிகாரிகள் கலந்து  கொண்டார்கள்.