உடுமலை பிப்.1- உடுமலையில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் வன அதிகாரிகள் கலந்து கொள் ளாததால் விவசாயிகள் கூட்டத்தை புறக்க ணித்தனர். விவசாயிகளுக்கும், வனத்துறைக்கும் உள்ள பிரச்சனைகள் குறித்து பேச மாதம் ஒரு முறை உடுமலை வனச்சரகர் அலுவலகத் தில் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறுவது வழக் கம். இந்நிலையில் 31 ஆம் தேதி குட்டை திடல் அருகில் உள்ள வன அலுவலகத்தில் கூட்டம் நடைபெறும் என்று விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தில் விளைநிலங்களில் வனவிலங்கு களால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், வனத் துறை சார்ந்த செயல்கள் பற்றி விவசாயிக ளுக்கு வனத்துறை சார்பில் விளக்கம் தரும் கூட்டம் என்பதால் வனத்துறையின் சார்பில் முக்கிய அதிகாரிகள் கலந்து கொள்வார்கள். ஆனால் இக்கூட்டத்திற்கு எந்த அதிகாரிக ளும் கலந்து கொள்ளாததால் விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த மாதம் நடந்த கூட்டத்தில் விளைநிலங் களுக்கு காட்டு விலங்குகள் வருவதை தடுக் கும் வகையில், மலை அடிவாரத்தில் சூரிய சக்தி மின் வேலி அமைக்க நடவடிக்கை எடுக் கப்படும் என்று வனத்துறையினர் உறுதி அளித்திருந்தனர். ஆனால் இன்று வரை சூரி யசக்தி மின் வேலி அமைக்கப்படவில்லை. இதனால், கடந்த வாரம் வளையபாளையம் பகுதியில் தென்னை மரங்களை யானை கள் சேதப்படுத்தியது. மேலும், காட்டுப்பன் றிகள் விளைநிலத்தில் உள்ள மக்காசோளம் விளைச்சலை சேதப்படுத்தி வருகிறது. இதைத்தடுக்க வனத்துறை எடுத்த நடவ டிக்கைகள் குறித்து கேட்க வந்தோம். ஆனால் கூட்டத்திற்கு அதிகாரிகள் யாரும் வராததா தல் கூட்டத்தைப் புறக்கணித்ததாக தெரிவித் தனர்.